ஆப்நகரம்

சித்தாள் பெண்ணுடன் உல்லாசம், நேரில் பார்த்த நண்பருக்கு வெறி..! தேனியில் பயங்கரம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே நண்பனின் காதலியை உல்லாசத்துக்கு இணங்க வைத்த வாலிபர் சடலமாக புதரில் கண்டெடுப்பு

Samayam Tamil 18 Jan 2021, 2:25 pm
சித்தாள் பெண்ணிடம் நண்பர் உல்லாசமாக இருப்பதை பார்த்துவிட்டு தானும் உல்லாசம் அனுபவிக்க நினைத்த வாலிபருக்கு நேர்ந்த கொடூர சம்பவம், போடிநாயக்கனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil youth brutally murdered after having sex with friend girlfriend theni
சித்தாள் பெண்ணுடன் உல்லாசம், நேரில் பார்த்த நண்பருக்கு வெறி..! தேனியில் பயங்கரம்


​ரவிக்குமாரும், பிரபுவும்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை அடுத்த கீழச்சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் அப்பகுதியில் கட்டட வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (25). இவர் டிப்ளமோ படித்துள்ள நிலையில், பெங்களூருவில் மெக்கானிக் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து வந்தவர், பிரபுவுடன் சேர்ந்து கட்டட வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்ததும் இருவரும் ஒன்றாக மது குடிப்பது வழக்கம். இந்த சூழலில் கடந்த 10ஆம் தேதி வேலைக்கு சென்ற ரவிக்குமார் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் ரவிக்குமாரை தேடி வந்த போலீசார் அப்பகுதியில் இருந்த புதரில் ரவியை சடலமாக கண்டெடுத்தனர். அப்போது, ரவிக்குமாரின் முகம் முழுவதும் சிதைந்த நிலையில், வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

​ஆர்வ கோளாறால் சிக்கிய வாலிபர்

இதையடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கொலையாளியை குறித்து விசாரித்து வந்தனர். அப்போது, போலீசாருக்கு ரவிக்குமாரின் நண்பர் பிரபு மீது சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், ரவிக்குமாரை கொலை செய்தவர்களை பிடிக்க போலீசாருக்கு உதவுவது போல நாடகமாடிய பிரபு, மோப்ப நாயை வரவையுங்கள், கடைசியாக ரவிக்குமார் பேசிய செல்போன் எண்ணை ஆய்வு செய்யுங்கள் என்றெல்லாம் கூறியிருக்கிறார். அதனால், போலீசாருக்கு சந்தேகம் வலுவாக எழவே, அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

​பிரபுவின் வாக்குமூலம்

கட்டட வேலைக்கு செய்து வந்த பிரபுவுக்கு அங்கு வேலை பார்த்த சித்தாள் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நெருக்கமாகி இருவரும் பல நேரங்களில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விஷயம் பிரபுவின் நண்பர் ரவிக்குமாருக்கு தெரிய வரவே, அவருக்கும் அந்த பெண் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால், நீ என்னிடமும் உல்லாசமாக இருக்க வேண்டும் என கூறி ஆசைக்கு இணங்க வைத்துள்ளார் ரவிக்குமார். இந்த விவகாரம் பிரபுவுக்கு தெரிய வரவே, நண்பனின் காதலி மீதே ரவிக்குமார் ஆசை படுவதை குறித்து பிரபுவுக்கு ஆத்திரம் வந்துள்ளது. இதுகுறிப்டுக்கு ஒருநாள் பிரபு கேட்டபோது, அதை ரவிக்குமார் உதாசினப்படுத்திவிட்டார்.

​முகம் சிதைப்பு

அதனால் ஆத்திரமடைந்த பிரபு, ரவிக்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி சம்பவம் அன்று மதுகுடிக்க ரவிக்குமாரை அழைத்துள்ளார் பிரபு. இருவரும் போதையானதையடுத்து, சித்தாள் பெண்ணை குறித்து பேசியுள்ளனர். அப்போது பிரபு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரவிக்குமாரை வெட்டி கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு அடையாளம் தெரியாக்கூடாதென்பதற்காக, ரவிக்குமாரின் முகத்தை சிதைத்துவிட்டு, அந்த பகுதியில் மிளகாய் பொடியை தூவி சென்றது தெரிய வந்தது.

​பெண்ணாசை

வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட போலீசார் பிரபு மீது கொலை, ஆதாரங்களை மறைத்தல், வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து கைது செய்தனர். உடன் பழகிய நண்பனால் மகன் கொல்லப்பட்ட சம்பவத்தால் ரவிக்குமாரின் பெற்றோர் கதறி அழுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மண்ணாசையும், பெண்ணாசையும் என்றைக்கும் நிம்மதியை தராது என்பதற்கு இந்த சம்பவமே சான்று.

அடுத்த செய்தி