ஆப்நகரம்

தங்கையுடன் குடும்பம் நடத்தி வந்த வாலிபர் ஓட ஓட வெட்டிக்கொலை..! நெல்லை பயங்கரம்

நெல்லை அருகே தங்கை முறை பெண்ணை திருமணம் செய்துகொண்ட வாலிபரை வெட்டி படுகொலை செய்த குடும்பம்

Samayam Tamil 12 Dec 2020, 4:28 pm
திருநெல்வேலி மாவட்டம் பழையபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜ் (25). இவர் கேபிள் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவரது தாய் உடல்நல பாதிப்பால் உயிரிழந்து விட்டதால் சித்தப்பா இசக்கி வீட்டில் அடிக்கடி சென்று உணவு சாப்பிட்டு வந்துள்ளார் காளிராஜ். அப்போது இவருக்கும் சித்தப்பா மகளுக்கும் இடையே முறை தவறிய காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஆள் இல்லாத நேரத்தில் வீட்டில் காதல் சிலுமிஷத்தில் ஈடுபட்டு வந்ததை அறிந்துகொண்ட சித்தப்பா, காளிராஜை கண்டித்ததுடன் இனி வீட்டு பக்கம் வரக்கூடாது என்று கூறிவிட்டார்.
Samayam Tamil file pic


இதையடுத்து, காதலை கைவிட மறுத்த இருவரும் சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். சில நாட்கள் பாளையங்கோட்டையில் வாடகைக்கு குடியேறி குடும்பம் நடத்தி வந்த காளிராஜ் அண்மையில் தனது சொந்த வீட்டுக்கு வந்துள்ளார். சித்தப்பாவின் மகளை திருமணம் செய்ததுடன் அவர்களது வீட்டுக்கு அருகிலேயே குடித்தனம் நடத்தி வந்த காளிராஜை அக்கம் பக்கத்தினர் விமர்சித்ததால், சித்தப்பா இசக்கியின் குடும்பம் ஆத்திரம் அடைந்துள்ளனர்.


தொடர்ந்து காளிராஜுடன் அடிதடியில் ஈடுபட்டு வந்த சித்தப்பாவின் குடும்பம் கொலை மிரட்டலும் விடுத்தாததாக கூறப்படுகிறது. இதனால், பாளையங்கோட்டையில் உள்ள வெவ்வேறு பகுதிகளில் பலமுறை வீடு மாற்றிக்கொண்டு வந்த தம்பதியை விடாமல் துரத்தி சென்ற சித்தப்பாவின் குடும்பம் தொடர்ந்து காளிராஜுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளது.

கருப்பு சட்டை, எதிர் வீட்டு வாலிபர் ஈர்ப்பு, முறைப்படி வீட்டுக்கு வந்து உல்லாசம்

இந்த நிலையில் வேலை முடிந்து கடந்த வியாழக்கிழமை இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்த காளிராஜை வழி மறித்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக ஓட ஓட வெட்டி கொலை செய்துள்ளது. சம்பவம் அறிந்து வந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்து காளிராஜின் உடலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து கொலை வழக்கை பதிவு செய்த போலீசார் செய்த விசாரணையில், காளிராஜின் கொலையில் சித்தப்பா இசக்கிக்கும் அவரது மகன்களுக்கும் தொடர்பு இருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து அதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி