ஆப்நகரம்

ஆசையாய் வாங்கிய சொகுசு காரில் எரிந்து சாம்பலான இளைஞர்- திண்டுக்கல் பயங்கரத்தின் பின்னணி!

திண்டுக்கல் பகுதியில் சொகுசு கார் ஒன்றில் இளைஞர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 Jul 2019, 10:34 am
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கோவிலூரைச் சேர்ந்தவர் மகாமுனி. இவர் ஓட்டல் ஒன்றை நடத்தி கொண்டிருக்கிறார். இவரது மகன் சிவா. கடந்த 3 மூன்று மாதங்களுக்கு முன்பு, சென்னையில் ஃபோக்ஸ் வேகன் என்ற சொகுசு காரை சிவா வாங்கியுள்ளார்.
Samayam Tamil Car Accident


இந்த காரில் தனது நண்பர் சின்ன ராஜா உடன் அடிக்கடி ஊர் சுற்றி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, பக்கத்து கிராமத்தில் ஒரு துக்க நிகழ்வு நடந்துள்ளது. இதற்காக தனது சொகுசு காரில் நண்பர் சின்ன ராஜா உடன் சிவா சென்றுள்ளார்.

இப்படியொரு கொடூர தற்கொலையா? சென்னை போலீஸ் எஸ்.ஐ செஞ்ச வேலையைப் பாருங்க!

அந்த கிராமத்தில் மாலை வாங்க சிவா காரில் இருந்து இறங்கியுள்ளார். அப்போது குடி போதையில் இருந்த சின்ன ராஜா, காரை தாறுமாறாக ஓட்டிச் சென்றுள்ளார். அதில் இரு சக்கரம் ஒன்றின் மீது பயங்கரமாக மோதியுள்ளார்.

இந்த விபத்தில் இரு சக்கரம் வாகனம் பலத்த சேதமடைந்ததால், காரை அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனர். பின்னர் தன்னிடமிருந்த ரூ.10,000 பணத்தை அவர்களிடம் அளித்துள்ளனர். பின்னர் ஊருக்கு திரும்பிய சிவா, தனது காருக்கு ஏற்பட்ட சேதத்தை சுமார் ரூ.1 லட்சம் செலுத்தி சரிசெய்துள்ளார்.

இது தமிழ்நாடா? குடிகார நாடா? - இதைக் கேட்டதுக்கு கைது செய்த போலீஸ்; ஆப்பு அடித்த நீதிபதி!

இதையடுத்து கார் சேதமடைந்த விவகாரத்தில் சிவா, சின்ன ராஜா இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அருகிலுள்ள கிராமத்தில் கரகாட்டம் காண, தனது சொகுசு காரில் சிவா சமீபத்தில் சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு சிவா வீடு திரும்பவில்லை.

இந்த சூழலில் அடுத்த நாள் காலை கோவிலூரில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள இடத்தில் சிவாவின் கார் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

நாகர்கோவிலில் கல்லூரி மாணவர்களுக்கு போதை ஊசி மருந்துகள் விற்பனை செய்த இருவர் கைது!

அவர்கள் சோதனை செய்ததில், எரிந்த நிலையில் எலும்புகள் கிடைத்துள்ளன. இதனை தடவியல் துறையினர் எடுத்துச் சென்று, தீவிர சோதனை செய்தனர். இதில் சிவா உயிரிழந்தது கண்டறியப்பட்டது.

இந்த கொலைக்கான காரணம் என்ன, யார் கொலை செய்துள்ளனர் என்று தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் திண்டுக்கல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி