ஆப்நகரம்

தந்தைதான் முக்கியம்... தாலி காட்டிக்கொண்ட காதலி மனம் மாறியதால் வாலிபர் தற்கொலை

விழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட பெண் மனம் மாறி தந்தையுடன் சென்றதால் விரக்தியில் காதலன் கைது.

Samayam Tamil 2 Jan 2022, 7:21 pm
விழுப்புரம்: காதல் திருமணம் செய்து கொண்ட இரண்டாவது நாளே காதல் மனைவி பெற்றோருடன் சென்றதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இளைஞரின் தற்கொலை மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil விழுப்புரம் வாலிபர் தற்கொலை


விழுப்புரம் அடுத்த வளவனூர் வடக்குதெருவை சேர்ந்த ஓட்டுனரான வெற்றிவேல், அதே பகுதியை சேர்ந்த தரணி ஆகிய இருவரும் கடந்த மூன்றாண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவரின் காதல் விவகாரம் தரணியின் தந்தையான குமரவேலுக்கு தெரியவரவே உடனடியாக தரணிக்கு உறவினர் ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து தரணி வீட்டை விட்டு வெளியேறி திருவந்திபுரத்தில் வெற்றிவேலுடன் கடந்த டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டுள்ளார். காதல் திருமணம் செய்த தகவல் தரணியின் தந்தையான குமரவேலுக்கு தெரியவரவே காதல் திருமணம் செய்த ஜோடிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டலையடுத்து திருமணம் செய்து கொண்ட ஜோடி விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது தந்தையிடமிருந்து பாதுகாப்பு வழங்ககோரி தஞ்சமடைந்து புகார் மனு அளித்தனர்.

வருடத்திற்கு 28 லட்சம் சம்பளம்: ஆன்லைன் ரம்மியால் குடும்பத்தை கொன்று வங்கி ஊழியர் தற்கொலை

இந்நிலையில், இளம்பெண் தரணி மனம்மாறி தந்தையுடன் சென்றதால் காதல் திருமணம் செய்து கொண்ட வெற்றிவேல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடலை கைப்பற்றி வளவனூர் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் திருமணமான இரண்டாவது நாளே காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி