ஆப்நகரம்

மகளோட நண்பன் என்பதால் வீட்டில் விட்டோம், பெட்ரூம் வரைக்கும் வந்துட்டான்..!

சென்னை அருகே ஒரு தலை காதலால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட வாலிபரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 Oct 2020, 7:38 pm
அரியலூரைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (22). இவர் சமீபத்தில் குஜராத் சென்றபோது அங்கு சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை சந்தித்துள்ளார். இருவரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்த என்ற முறையில் பேச ஆரம்பித்துள்ளனர். அதன் பின்னர் செல்போன் எண்களை பகிர்ந்துகொண்டு நட்பை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் சென்னைக்கு வேலை நிமித்தமாக வந்த ஜீவனந்தனுக்கு தங்க வீடு கிடைக்கவில்லை.
Samayam Tamil youth suicide


இதனால், சங்கடத்தை குறித்து ஜீவானந்தம் தனது சென்னை தோழியிடம் கூறவே, வீட்டில் உள்ளவர்களின் சம்மதத்துடன் ஜீவனந்தத்தை தனது வீட்டில் தங்க வைத்துள்ளார். அன்று இரவு உறங்கிய ஜீவானந்தம், காலையில் எழுந்து தனது தோழியிடம் உரையாடியுளார். அப்போது, நான் உன்னை காதலிக்கிறேன். என்னை தவிர வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ளாதே என்று முரட்டு பாணியில் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண், ஜீவானந்தத்தின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, கோபமடைந்த ஜீவானந்தம், சமயலறையில் இருந்த கேஸ் சிலிண்டரை எடுத்து வந்து இளம்பெண்ணின் பெற்றோர் படுத்திருந்த அறைக்கு சென்றார். காதலை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறி, சிலிண்டரை திறந்துவிட்டு தீ பற்றவைப்பதாக பயமுறுத்தியுள்ளார். இதனால் இளம்பெண் அலறவே, பதறி எழுந்த பெண்ணின் பெற்றோர், ''ஏய் என்ன செய்கிறாய் என்று கேட்டுள்ளனர். பின்னர் ஜீவானந்தத்தின் காதல் தொந்தரவை தெரிந்துகொண்ட இளம்பெண்ணின் தந்தை, ஜீவானந்தத்தை அறையை விட்டு வெளியே தள்ளியுள்ளார்.

விவாகரத்தான பெண்ணை மிரட்டி மிரட்டி சீரழித்த போலீஸ், 8 வயது சிறுமிக்கும் நேர்ந்த கதி

இதையடுத்து, ஜீவானந்தம் அந்த அறையில் கதவை மூடிவிடவே, குடும்பம் முழுவதும் கேஸ் சிலிண்டர் கசியும் அறையில் சிக்கிக்கொண்டுள்ளது. அப்போது அவர்கள் உடனே வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்ததன் பேரில் போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு வந்து, அறையில் சிக்கியிருந்த அவர்களை பாதுகாப்பாக மீட்டனர்.

ஆனால், ஜீவானந்தம் அதே வீட்டின் முன்பு கழுத்தை அறுத்துக்கொண்டு நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடைந்த பாட்டிலால் அவர் கழுத்தை அறுத்துக்கொண்டதை அறிந்துகொண்ட போலீசார் உடனே அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துளள்னர். இந்நிலையில், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இளம்பெண்ணின் குடும்பத்தாரை தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி