ஆப்நகரம்

காதலிக்கு திருமண ஏற்பாடு... கல்லூரி மாணவன் தற்கொலை... சேலத்தில் சோக சம்பவம்

தலைவாசல் அருகே காதல் தோல்வியால் இன்ஜினியரிங் மாணவன் விஷமருந்தி தற்கொலை தலைவாசல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 24 Jun 2022, 2:26 pm
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காமாக்காபாளையம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவர் அப்பகுதியில் தபால் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நல்லதம்பிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
Samayam Tamil salem suicide news


இதில் மூத்த மகன் நந்தஅழகன் (20) இவர் சேலம் மின்னாம்பள்ளி உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் அதே கல்லூரியில் படித்துவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

தற்போது அந்தப் பெண்ணின் உறவினர் வீட்டில் மாப்பிள்ளை பார்த்ததால் பெண் அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக நந்த அழகனிடம் தெரிவித்துள்ளர். பின்னர் நந்தஅழகன் நேற்று இரவு 11 மணி வரை அந்த பெண்ணுடன் போனில் பேசியதாக கூறப்படுகிறது.

பின்னர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்த போது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கர்ப்பிணி பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம்... போலீஸ் உடந்தை... ஜோடியை தேடும் ஆண், பெண்..!

தகவலறிந்து வந்த தலைவாசல் போலீசார் உடலை கைப்பற்றிஉடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் தோல்வியால் கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி