ஆப்நகரம்

'என்னிடம் பேசாதீர்கள்'... வீடியோ கேமில் மூழ்கிய இளைஞர் தற்கொலை..!

புதுச்சேரியில் சிவில் இன்ஜினியர் பட்டதாரி இளைஞர் மொபைல் போன் மற்றும் கம்யூட்டரில் கேம் விலையாடியதால் ஏற்பட்ட மனஉளைச்சலில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Nov 2021, 2:44 pm
புதுச்சேரி மங்கலம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் தீபக் வயது 22. சிவில் இன்ஜினியர் பட்டதாரியான இவர் கடந்த ஆண்டு கொரோனா காலத்திற்கு பிறகு மிக அதிகமாக கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போனில் ஆன்லைனில் விளையாடி உள்ளார். அதன் பிறகு சிறிது உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil deepak


கடந்த இரண்டு நாட்களாகவே தங்கள் வீட்டில் இருப்பவர்களிடம் 'நான் மிகுந்த டென்ஷனில் உள்ளேன் என்னிடம் பேசாதீர்கள், நான் மிகவும் கோபமாக உள்ளேன்', இது போன்ற வார்த்தைகளை உபயோகித்து உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இரவு அவருடைய வீட்டில் இரண்டாவது மாடியில் தனக்கென தனியாக இருந்த அறையில் கம்ப்யூட்டர் மொபைல் போன் மற்றும் கேம் விளையாடுவதற்கான அனைத்து வசதிகளுடன் கூடிய அறையில் உள்பக்கமாக தாழிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலை வீட்டில் உள்ளவர்கள் தீபக்கை எழுப்ப அவரது ரூம் கதவை தட்டியுள்ளனர். வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தீபக் தூக்கில் தொங்கியது தெரியவந்தது.

அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் உடல்!

இதனையடுத்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து தீபக்கின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மொபைல் போன் மற்றும் வீடியோ கேமில் மிக அதிக நேரம் விளையாடியதன் விளைவாக மன உளைச்சலில் விரக்தியாகி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

ஆகவே, பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை மிக அதிகமாக செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் கேம் விளையாட அனுமதிக்க வேண்டாம் என்று காவல்துறையின் மூலம் தங்களை எச்சரிக்கை செய்வதாக தெரிவித்தனர். இதனால் அந்த குடும்பமே சோகத்தில் மூழ்கியது.

அடுத்த செய்தி