ஆப்நகரம்

60 நாள் குடித்தனம், சலித்துப்போன வாலிபர், சென்னை காதலி கதறல்!

சென்னை அருகே காதலியுடன் நெருக்கமாக இருந்து விட்டு ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 19 Dec 2020, 6:30 pm
சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் வியாசர்பாடியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் இரு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீராமின் தாய்க்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாயை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால் ஸ்ரீராம் தனது காதலியை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
Samayam Tamil ஸ்ரீராம்


மேலும், தாய் குணமாகும் வரை தனது வீட்டிலேயே தங்கி கொள்ளுமாறு ஸ்ரீராம் கூறியிருக்கிறார். அதன்படி, இளம்பெண்ணும் தொடர்ந்து இரண்டு மாதங்கள் அங்கேயே வசித்துள்ளார். இந்நிலையில், காதலிக்கு திருமண ஆசை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்துளளார் ஸ்ரீராம். எப்படியும் திருமணம் செய்துகொள்ள போகிறோம் என்ற நினைப்பில் இருந்த இளம்பெண்ணும் தாலி கட்டிக்கொள்ளாமலேயே காதலனுடன் தாம்பத்திய உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இரண்டு மாதங்கள் காதலியுடன் இஷ்டப்படி இருந்துவந்த ஸ்ரீராமுக்கு காதலி மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், திருமணம் செய்துகொள்ளாமல் காதலியை கழட்டி விட முயற்சித்துள்ளளார். ஏமாற்றமடைந்த இளம்பெண் பலமுறை ஸ்ரீராமிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு கெஞ்சியுள்ளார்.

சிறுமிக்கு தாலி கட்டி, கர்ப்பமாக்கி, கர்ப்பப்பையை வெளியே எடுத்த அவலம்..!

எதையும் காதில் வாங்காமல் காதலியை கழட்டி விடுவதிலேயே முனைப்பு காட்டி வந்த ஸ்ரீராமை குறித்து இளம்பெண் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஸ்ரீராமை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

காதலன் மீது நம்பிக்கை இருக்க வேண்டியதுதான். ஆனால், எச்சரிக்கையாக இருப்பது மிக மிக முக்கியம். இப்படி பல பெண்கள் காதலில் ஏமார்ந்து வாழ்க்கையை இழந்து அரசு காப்பகத்தில் பரிதவிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

அடுத்த செய்தி