ஆப்நகரம்

திருமணத்துக்கு மறுத்த காதலிக்கு இரவில் நேர்ந்த சம்பவம்..! திருவாரூரில் பரபரப்பு

திருவாரூர் அருகே திருமணம் செய்ய மறுத்த பெண்ணை கொலை செய்த வாலிபர் கைது

Samayam Tamil 25 Jul 2021, 4:42 pm
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் சிவசங்கரன். இவருக்கு வயது 28. இவர் தனது உறவுக்கார பெண்ணான மவுலிகாவை (18) ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து பலமுறை பெண்ணிடம் தெரிவித்த நிலையில் சிவசங்கரன் காதலை பெண் ஏற்க மறுத்துள்ளார்.
Samayam Tamil கொலை நடந்த இடம்


அதோடு விட்டுவிடாமல், தொடர்ந்து மவுலிகாவை பெண் கேட்டு அவரது வீட்டுக்கு சென்றுள்ளார் சிவசங்கரன். அப்போது, பெண் வீட்டாரும் திருமணத்துக்கு மறுத்துள்ளனர். மேலும், இரு வீட்டார் முன்னிலையிலும், சிவசங்கரை பிடிக்கவில்லை என மவுலிகா தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கரன் இரவில் மவுலிகா தூங்கிக்கொண்டிருந்த போது அவரது தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.

நடிகை யாஷிகா ஆனந்த் மீது வழக்கு பதிவு!

தொடர்ந்து அங்கிருந்து தப்பியவறை ஊர் மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். இந்நிலையில், மகளின் சடலத்தை பார்த்து கதறி அழுத்த பெற்றோர், முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து போலீசார் சிவசங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தன்னை விரும்பாத பெண்ணை திருமணத்துக்கு வற்புறுத்தியது மட்டுமின்றி கொலையும் செய்துள்ள கொடூர அரக்கனின் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி