ஆப்நகரம்

மது குடிப்பதற்காக மனைவி, குழந்தையை விட்டு சென்ற வாலிபர்..! நெல்லையில் நேர்ந்த அதிர்ச்சி

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே நண்பரை மது அருந்த வீட்டிற்கு அழைத்து வந்து படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 Sep 2020, 9:06 pm
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள அடங்கார்குளத்தைச் சேர்ந்தவர் சுகுந்தன். இவர் சென்னையில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட முழு அடைப்பினால் சென்னையிலிருந்து குடும்பத்துடன் தனது சொந்த ஊரான அடங்கார் குளத்திற்கு வந்துவிட்டார் .
Samayam Tamil sugunthan and family


இவருக்கு தேவி என்ற மனைவியும் ஒரு வயதில் சுபத்ரா என்ற குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு இவரது நண்பரான மேலசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் சுகுந்தனை மது அருந்த வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அதனை நம்பி சுகுந்தனும் அவரது நண்பர் வசந்த்தும் முருகனின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது சுகுந்தன் மட்டும் வீட்டிற்குள் சென்றுள்ளார். அவரது நண்பர் வசந்த் வெளியே இருந்துள்ளார். இந்த நிலையில் சிறிது நேரத்தில் வீட்டுக்குள் திடீரென சுகுந்தனின் அலரல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் வசந்த வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளார். அவரையும் தாக்க அங்கிருந்த முருகன் மற்றும் அவரது நண்பர் சிங்கராஜா ஆகியோர் முயற்சித்துள்ளனர்.



இதுக்குமேல முடியாது விட்டுடு, தற்கொலைக்கு முன் நடிகை அனுபவித்த கொடுமை...

அவர்களிடமிருந்து வசந்த் தப்பித்து அடங்கார்குளம் வந்து சுகுந்தன் தாக்கப்பட்டது குறித்து கூறியுள்ளார். அங்கிருந்து சுகுந்தனின் உறவினர்கள் முருகனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டின் உள்ளே வைத்து சுகுந்தனை, முருகன் மற்றும் அவரது நண்பர் அரிவாளால் வெட்டியும், கம்பால் அடித்தும் காயப்படுத்தி கிரைண்டரில் குழவி கல்லை தூக்கி தலையில் போட்டு கொலை செய்துவிட்டு தப்பித்து சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து சுகுந்தனின் உறவினர்கள் கூடங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து கூடங்குளம் போலீசார் அங்கு வந்து படுகொலை செய்யப்பட்ட சுகுந்தனின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இறந்துபோன சுகுந்தனின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளி முருகன் மற்றும் அவரது கூட்டாளியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முன்பகை காரணமாக கொலை நடந்ததா வேறு என்ன காரணம் உண்டா என தீவிர விசாரண செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி