ஆப்நகரம்

ஓரின சேர்க்கையில் விரிசல்: வாலிபரை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட தொழிலாளி

திண்டுக்கல் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Nov 2020, 7:16 pm
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது ஒரே மகன் ஸ்ரீகாந்த் (18) சென்னையில் உள்ள ஷாப்பிங் மாலில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், சில நாட்கள் முன்னர் விடுமுறை கிடைத்து சொந்த ஊரான ரெட்டியபட்டிக்கு வந்துள்ளார்.
Samayam Tamil வாலிபர் கொலை


இந்நிலையில் நேற்றிரவு அப்பகுதியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஸ்ரீகாந்த் சடலமாக இருந்துள்ளார். மகனின் சடலத்தை பார்த்து கதறி அழுத ஸ்ரீகாந்தின் பெற்றோர் சம்பவம் குறித்து நத்தம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஸ்ரீகாந்தின் சடலம் அருகே கிடந்த தடயங்களை சேகரித்து, பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர். இந்நிலையில், கிராமம் முழுவதும் போலீசாரின் விசாரணையில் வந்தது.

இதற்கிடையில், அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (33) என்ற கூலி தொழிலாளி ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்த மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசாருக்கு இந்த இரண்டு மரணத்திலும் தொடர்பு இருப்பதை கண்டு பிடித்தனர்.

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பக்கத்துக்கு வீட்டு தாத்தா..! தெருவில் வீசப்பட்ட குழந்தை

அதாவது, ராமச்சந்திரனும், ஸ்ரீகாந்தும் ஓரினை சேர்க்கை முறையில் இருந்து வந்துள்ளனர். நீண்ட நாட்களாக தம்பதியை போல வாழ்ந்து வந்த இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் ராமச்சந்திரன் ஸ்ரீகாந்தை கொலை செய்துள்ளார். பின்னர் போலீசாருக்கு பயந்து ராமச்சந்திரனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. அது தொடர்பான கடிதத்தையும் கைப்பற்றியுள்ள போலீசார் மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி