ஆப்நகரம்

ஆடுகளை எங்கே கட்டுவது? கொலையில் முடிந்த தகராறு!

நெல்லை வண்ணாரப்பேட்டையில் ஆடு வளர்த்ததில் ஏற்பட்ட தகராறில் பக்கத்துவீட்டுகாரரால் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 20 Mar 2020, 4:54 pm
நெல்லை வண்ணாரப்பேட்டை சாலைத் தெருவைச் சேர்ந்தவர் முப்பிடாதி (34). கூலி தொழிலாளியான இவருக்கு 4 குழந்தைகளும் ஒரு மனைவியும் உள்ளனர். இவர் வண்ணாரப்பேட்டை சாலைத் தெருவில் தாமிரபரணி நதிக்கரையில் வீடுகட்டி 12 வருடங்களுக்கு மேலாக குடியிருந்துவருகிறார்.
Samayam Tamil கொலையில் முடிந்த தகராறு


மாடுகள் வைத்து அவ்வப்போது பால் வியாபாரமும் செய்துவருகிறார். இவரது வீட்டின் அருகே அண்ணாமலை என்பவரும் குடியிருந்துவருகிறார். இவர் ஆடு வளர்க்கும் தொழிலுடன் கூலி தொழிலும் செய்து வருகிறார். அண்ணாமலையும் முப்பிடாதியும் உறவினர்கள் என கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முப்பிடாதி தனது வீட்டை புனரமைத்தபோது அண்ணாமலைக்கு சொந்தமான இடத்தை சேர்த்து வீடுகட்டுவதாக தகராறு ஏற்பட்டுள்ளது.

மனைவியை கொன்ற கணவர் போலீஸில் சரண்..! கிடுங்க வைத்த காரணம்...

அதிலிருந்து தொடர்ந்து சிறு சிறு விஷயங்களுக்கு எல்லாம் இருவரிடைய சண்டை வருவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் ஆடு வளர்க்கும் தொழில் செய்யும் அண்ணாமலை தனது ஆடுகளை பட்டியில் கட்டாமல் காலை நேரத்தில் முப்பிடாதி வீட்டருகே உள்ள காலியிடத்தில் அவிழ்த்து விட்டு செல்வதால் ஆடுகள் முப்பிடாதி வீட்டில் உள்ள பொருட்களை அடிக்கடி நாசம் செய்துவிடுவதாகவும் அதன் காரணமாகவும் அடிக்கடி இருவருக்கும் சண்டை வந்ததாகவும் அக்கம்பக்கத்தினரால் கூறப்படுகிறது.

இதே நிலையில் நேற்று (19-03-20) முப்பிடாதி வேலைக்கு செல்லும் நேரத்தில் ஆடு வீட்டுக்குள் வருகிறது எனக்கூறி அண்ணாமலையுடன் கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது. பின்னர் முப்பிடாதி அருகில் உள்ள தோட்டத்தில் வாழை சுமக்கும் பணிக்கு சென்றுவிட்டு மதியம் சாப்பிட வந்தபோது அண்ணாமலை முப்பிடாதியுடன் காலை நடந்த சம்பவத்தை வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இன்னும் தீராத அந்தப் பிரச்சினை; அதுவும் போனில் இப்படி சொன்னால் சும்மா விடுவார்களா?

அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றவே அருகே இருந்த கட்டையால் முப்பிடாதியை அண்ணாமலை தாக்கியதில் சம்பவ இடத்தில் ரத்தவெள்ளத்தில் முப்பிடாதி மயங்கிவிழுந்துள்ளார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு முப்பிடாதியை அனுப்பிவைத்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனை செல்லும் வழியில் படுகாயமடைந்த முப்பிடாதி உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பாளையங்கோட்டை போலீஸார் அண்ணாமலையை கைது செய்ததுடன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடு வளர்க்கப்பட்டதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி