ஆப்நகரம்

போக்சோ வழக்கில் சிறைக்கு சென்ற காதலனை கரம் பிடித்த பெண்... மதுரையில் வியப்பு சம்பவம்

மதுரையில் மூன்று முறை காதலியை திருமணம் செய்த வாலிபரின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 17 Jun 2022, 6:28 pm
மதுரை மாவட்டம் புதிய சிறைச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்பவரை நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணும் அஜித்குமாரை உருகி உருகி காதலித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சண்முகப்பிரியாவை அஜித்குமார் ரகசியமாக இரண்டு முறை திருமணம் செய்துள்ளார்.
Samayam Tamil madurai coupel


ஆனால், அப்போது சண்முகப்பிரியாவுக்கு 18 வயது நிரம்பாததால் அஜித்குமார் மீது போக்சோ வழக்கு பாய்ந்து அவர் சிறையிலும் இருந்துள்ளார். ஆனாலும், இவர்களது காதல் முறியவில்லை. சிறைக்கு சென்று வந்த பிறகும் அஜித்குமாரும் சண்முகப்பிரியாவும் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்த சூழலில், இதே போக்சோ வழக்கில் ஜாமீனில் உள்ள அஜித்குமார் சண்முகப்பிரியாவை மூன்றாவது முறையாக தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். இந்த முறை சண்முகப்பிரியா திருமண வயதை கடந்ததால் மாலையும், கழுத்துமாக இருவரும் சூலூரில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று தஞ்சம் அடைந்தனர்.

அங்கு விசாரணை நடத்தப்பட்டு பின்னர் இருவரது வீட்டுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் இரு வீட்டாரையும் சமாதானம் பேசி புது தம்பதியை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

16 வயது மகளின் கருமுட்டையை விற்ற தாய்... புரோக்கர் மாலதியிடம் நடந்த விசாரணை

காதலித்த பெண்ணை கடைசி வரைக்கும் கை விடாத வாலிபரின் உறுதியான மனநிலையும், சிறைக்கு சென்று வந்தாலும் குறையாத காதலோடு காதலனை கரம் பிடித்த பெண்ணின் மனமும் போலீசார் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி