ஆப்நகரம்

பற்றி எரிந்த கள்ளக் காதல் விவகாரம்- திருச்சி இளைஞருக்கு இப்படியொரு பயங்கரம்!

துறையூர் அருகே கள்ளக் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்யபட்டுள்ளார்.

Samayam Tamil 22 Jul 2019, 12:48 pm
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அமைந்துள்ளது வேங்கடத்தானூர் கிராமம். இங்குள்ள தெற்கு காலனியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் துறையூர் அருகே மருவத்தூரில் உள்ள வெடிமருந்து ஆலையில் பணியாற்றி வந்தார்.
Samayam Tamil Youth Murder


இந்நிலையில் கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் பிரபாகரனின் பக்கத்து வீட்டுக்காரரான சந்திரகுமார் என்பவரின் மனைவி மணிமேகலை உடன், தவறான பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த சந்திரகுமார் அதிர்ச்சி அடைந்தார். உடனே பிரபாகரன் மற்றும் அவரது மனைவியை அழைத்து கண்டித்துள்ளார். ஆனால் இருவரும் கேட்கவில்லை. அடிக்கடி தவறான விஷயத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சத்தியமங்கலம் அருகே பெண் கழுத்தறுத்து கொலை!

இதனால் கோபம் கொண்ட சந்திரகுமார், பிரபாகரன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நன்றாக உறங்கிக் கொண்டிருந்த பிரபாகரன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, நெருப்பை பற்ற வைத்துள்ளார்.
துடியலூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 45 வயது முதியவர் கைது!

இதில் அவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் மற்றும் துறையூர் போலீசார் விசாரித்தனர். பின்னர் சந்திரகுமார் மற்றும் அவரது தந்தை முத்துசாமியை கைது செய்தனர்.

கள்ளக்காதலனை கொலை செய்த கள்ளக் காதலி!

அடுத்த செய்தி