ஆப்நகரம்

சைக்கிளுக்கு காற்று பிடித்து விட்டு 2 ரூபாய் தர மறுத்த வாலிபர் கொலை..! அதிர்ச்சி சம்பவம்..

திருப்பதியில் சைக்கிளுக்கு காற்று பிடித்து விட்டு 2 ரூபாய் கொடுக்க மறுத்த தகராறில் வாலிபர் குத்திக் கொலை.

Samayam Tamil 12 Nov 2019, 4:43 pm
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள வலசபாக்கா கிராமத்தை சேர்ந்தவர் சூரிய நாராயண ராஜு. இவர் அதே பகுதியில் உள்ள சாம்பா என்பவருக்கு சொந்தமான சைக்கிள் கடையில் தனது சைக்கிளுக்கு காற்று பிடிக்கும் படி கூறினார். அதன்படி சாம்பா சூரியநாராயணன் சைக்கிளுக்கு காற்று அடித்து விட்டு, பின்னர் 2 ரூபாய் பணம் கேட்டார்.
Samayam Tamil சைக்கிளுக்கு காற்று பிடித்து விட்டு 2 ரூபாய் தர மறுத்த வாலிபர் கொலை..!


ஆனால் சூரிய நாராயண ராஜு பணம் தர மறுத்ததோடு சாம்பா மீது தாக்குதல் நடத்தினார். இதனால் சாம்பா, சூரியநாராயண ராஜு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பெங்களூரு சிட்டியை அலற விட்ட பேய் மாணவர்கள் கைது..!

இந்நிலையில் சாம்பாவின் நண்பரான அப்பாராவ் சம்பவ இடத்தில இருந்ததால் இது குறித்து தட்டி கேட்டுள்ளார். ஆனால் அதையும் மீறி சூரியநாராயண ராஜு சாம்பாவை தாக்கியதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த அப்பாராவ், கடையில் இருந்த இரும்பு ராடை கொண்டு சூரிய நாராயண ராஜுவின் இடுப்பில் ஓங்கி குத்தினார்.

அரிவாள் வெட்டு, சிதறிய ரத்தம், பயணிகள் ஓட்டம் - கொரட்டூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு!

இதில் பலத்த காயமடைந்த நிலையில் சூரியநாராயண ராஜுவை காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து காக்கிநாடா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி