ஆப்நகரம்

பாபநாசம் படத்தில் நடந்தது போன்று அதிர வைக்கும் கொலை சம்பவம்!!

கல்லூரியில் படித்து வந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி, தனிக்குடித்தனம் நடத்திவிட்டு, வேறு பெண் கிடைத்தவுடன், காதலியை அடித்துக் கொன்று எரித்தவரை திண்டுக்கல் மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 3 Aug 2019, 2:03 pm
கல்லூரியில் படித்து வந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி, தனிக்குடித்தனம் நடத்திவிட்டு, வேறு பெண் கிடைத்தவுடன், காதலியை அடித்துக் கொன்று எரித்தவரை திண்டுக்கல் மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil நம்பி வந்த காதலியை கொலை செய்து வேறொரு பெண்ணை திருமணம் செய்த காதலன்!
நம்பி வந்த காதலியை கொலை செய்து வேறொரு பெண்ணை திருமணம் செய்த காதலன்!


திண்டுக்கல் மாவட்டம் நவமரத்துப்பட்டியைச் சேர்ந்தவரான பாண்டியின் மூத்த மகள் முத்தரசி. தனியார் கல்லூரியில் ஒன்றில் பிஎட் படித்து வந்தார். இவர் திருப்பூரில் இருக்கும் தனது அக்காவை பார்க்க அடிக்கடி சென்று வந்த நிலையில், கடந்த மார்ச் 6ஆம் தேதி முதல் முத்தரசி மாயம் ஆகியுள்ளார்.

இதையடுத்து இவரது குடும்பத்தினர் வேடசந்தூர் போலீசில் புகார் அளித்தனர். மூன்று மாதங்களுக்கு முன்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உயர்நிலைப்பள்ளியில் படித்து வரும்போது இவருக்கும், பரதன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள குளத்துப்பாளையத்தில் இருக்கும் பள்ளியில் படிக்கும்போது இந்தக் காதல் மலர்ந்துள்ளது. ஆனால், விசாரிக்கும்போது, பரதனுக்கு வேறு திருமணம் நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

காதலை ஏற்க மறுத்த டீச்சர்; பட்டப்பகலில் நடுரோட்டில் இளைஞர் செய்த காரியம் - சென்னை பயங்கரம்!

சந்தேகத்தின் பேரில் போலீசார் தொடர்ந்து பரதனை விசாரித்து வந்துள்ளனர். நான்காவது முறை விசாரிக்கும்போது உண்மையை பரதன் ஒப்புக் கொண்டார்.

இப்படியொரு கேவலமான தொடர்பா? கள்ளக் காதலியின் கையை துண்டாக்கி எறிந்த காதலன்!

போலீசாரிடம் பரதன் கூறுகையில், ''முத்தரசியை அமராவதிக்கு டாக்சி டிரைவர் குமார் உதவியுடன் அழைத்து சென்றேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் மன அழுத்தத்தில் இருந்தபோது, தற்கொலை செய்து கொள்ள அலுமினியம் பாஸ்பைட் வைத்து இருந்தேன். அதை அவருக்கு கொடுத்தேன். அதை சாப்பிட்ட முத்தரசி காரிலேயே இறந்துவிட்டார். பின்னர் அவரை எனது தந்தை கனகராஜ் மற்றும் உறவினர் சுப்பிரமணி உதவியுடன் வீட்டின் குளியலறை அருகே புதைத்தோம்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து நடந்து வந்த விசாரணையில், அவரது உடலை தோண்டி எடுத்து சென்று காட்டிற்குள் எரித்துள்ளனர். பின்னர் அந்த இடத்தில் எந்த தடயங்களும் தெரியக் கூடாது என்பதற்காக, நாயை எரித்துள்ளனர். அதேபோல் வீட்டில் பிணத்தை தோண்டி எடுத்த பின்னர் நாயை புதைத்துள்ளனர்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த 10 மருத்துவர்கள் மற்றும் வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் மற்றும் தாராபுரம் தாசில்தார் ஆகியோர் முன்னிலையில் நடத்த சோதனையில் இது தெரிய வந்தது. தற்போது பரதன் மற்றும் அவரது அம்மா லட்சமி இருவரும் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவரது தந்தை மற்றும் உறவினர் சுப்பிரமணி இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களது செல்போன் எண்ணை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டிவனம் அருகே மணமுடிந்த 20 நாளில் காதல் கணவனை எரித்து கொன்ற மனைவி!

பாபநாசம் படத்தில் நடந்த சம்பவத்தைப் போல நடந்துள்ள இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாபநாசம் படத்தில் நடந்த சம்பவத்தைப் போல நடந்துள்ள இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி