ஆப்நகரம்

40 வயசுடன் 24 குடித்தனம், ஆசை தீர்ந்ததால் கழட்டி விட்டவருக்கு நேர்ந்த கதி..!

திண்டுக்கல் அருகே வாலிபர் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் திருமணமான பெண் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 17 Nov 2020, 8:04 am
உறவில் இருந்த திருமணமான பெண்ணை உதறி தள்ள முயன்ற வாலிபர் கத்தி குத்துக்குள்ளாகி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். வாலிபரின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Samayam Tamil youth stabbed by knife a woman for refusing to marry in kodaikanal
40 வயசுடன் 24 குடித்தனம், ஆசை தீர்ந்ததால் கழட்டி விட்டவருக்கு நேர்ந்த கதி..!


​தகாத உறவு இன்பம் தராது

தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் தொடர்கதையாகி வருகின்றன. கொடைக்கானல் அருகே கணவனை இழந்து தனிமையில் வசித்து வரும் 40 வயதான பெண், தகாத உறவில் இருந்துவிட்டு கடைசியில் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​கொடைக்கானல் வாலிபர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் பிரதீப் (24). இவர் அப்பகுதியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மேலும், சுற்றுலா சீசன்களில் பயணிகளின் வழிகாட்டியாகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அதே பகுதியில் அதிமுக மாவட்ட பிரதிநிதியாக செயல்பட்டு வரும் பிரமிளா (40) என்ற பெண் 6 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை இழந்த நிலையில் ஒரு மகனுடன் வசித்து வந்துள்ளார். இதற்கிடையில் இரண்டாவதாக ராஜேஷ் என்பவரை திருமணம் செய்து பின்னர் அவரும் இறந்துவிடவே, தனிமையில் வசித்து வந்துள்ளார்.

​இளைஞர் மீது ஈர்ப்பு

இந்த நிலையில், பிரமிளாவுக்கும், பிரதீப்புக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. தனிமையில் வசிக்கும் பிரமீலாவுக்கு சிறு சிறு உதவிகளை செய்து வந்துள்ளார் பிரதீப். இதற்கிடையில், இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு நெருக்கமாக பழக தொடங்கினர். கணவன், மனைவியாக இருவரும் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பிரதீப் வீட்டுக்கு தெரிய வரவே, 40 வயதான பெண்ணுடன் இருக்கும் தகாத உறவை நிறுத்திக்கொள்ளுமாறு திட்டியுள்ளனர். இதற்கிடையில், பிரதீப்பிற்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் பேசி முடித்துள்ளனர். இந்த விஷயத்தை பிரமீளாவிடம் பிரதீப் கூறியுள்ளார். அப்போது இருவருக்குள்ளும் வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் சமாதானம் ஆகியுள்ளனர்.

​சரவெடியாய் வெடித்த பெண்

இந்த நிலையில், தீபாவளி அன்று பிரமீளாவின் வீட்டில் இருந்த பிரதீப் பண்டிகையை கொண்டாடியுள்ளார். அப்போதும், பிரதீப்பின் திருமணத்தை குறித்து பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில், தன்னை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்றும், தனக்கு தாலி கட்டி தன்னுடன் இருக்குமாறும் பிரமீளா கூறியிருக்கிறார். ஆனால், அதற்கு பிரதீப் மறுக்கவே, ஆத்திரமடைந்த பிரமீளா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரதீப்பின் தலையிலும், மார்பிலும் சரமாரியாக குத்தியுள்ளார்.

​போலீஸ் விசாரணை

அமித் ஷா கேட்கும் 50 தொகுதிகள்? அதிமுகவுக்கு அத்தனை பக்கத்திலும் அடி!

அதனால், நிலைகுலைந்த பிரதீப் கதறி துடித்துள்ளார். வாலிபரின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் பிரதீப்பை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தை குறித்து பிரதீப்பின் பெற்றோர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து பிரமீளா மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வயதுக்கு மீறிய தகாத உறவு ஆணுக்கும், பெண்ணுக்கும் முடிவில் நிம்மதி தராது என்பதற்கு இந்த சம்பவம் சாட்சியாக அமைந்துள்ளது.

அடுத்த செய்தி