ஆப்நகரம்

காதலிக்க மறுத்த மாணவி.. வேட்டு வைத்த புல்லிங்கோ..மதுரையில் பரபரப்பு

மதுரையில் பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்ததை கண்டித்ததால் மதுபோதையில் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

Samayam Tamil 14 Feb 2023, 12:38 pm
பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று உலக முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் காதலர் தினம் என்றாலே எதிர்ப்புகளையும், அத்துமீறல்களையும் தடுக்க முடியாது. அந்த வகையில், மதுரையில் காதலிக்க மறுத்த மாணவியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil madurai crime


மதுரை மேல அனுப்பானடி வடிவேலன் தெருவில் மண்பானை தொழிலாளியான சரவணக்குமார் குடும்பமும் மருதுபாண்டி என்பவரின் குடும்பமும் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் எதிரெதிர் வீட்டில் வசித்துள்ளனர்.

அப்போது சரவணக்குமாரின் 15 வயது மகளுக்கு, மருதுபாண்டியின் மகனான மணிரத்னம் (23) என்பவர் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மணிரத்தினத்தை சரவணகுமார் ஆரம்பத்திலேயே கண்டித்துள்ளார். ஆனால், மணிரத்தினத்தின் தொந்தரவு தொடரவே காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் சரவணக்குமார்.

அதன்பின்னர், மணிரத்னம் குடும்பத்துடன் வீட்டை காலி செய்து சின்னக்கண்மாய் பகுதிக்கு குடிபெயர்ந்து சென்றார். திருட்டு, கொள்ளை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு சிறை சென்று கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் வெளியே வந்துள்ளார்.

இந்த சூழலில், பழைய குற்ற வழக்குகளுக்காக இன்று மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு, நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அதனை தொடர்ந்து, மது போதை தலைக்கேறவே நண்பர்களுடன் வடிவேலன் தெருவுக்கு வந்து பழைய ஆத்திரத்தில் சரவணக்குமாரின் வீட்டு வாசலில் மண்ணெண்ணெய் குண்டை வீசியுள்ளார். அதிர்ஷ்டவசமாக வாசலில் அப்போது யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

கோர்ட் வளாகம் அருகே வாலிபர் படுகொலை.. கோவையில் பயங்கரம்..!

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய தெப்பக்குளம் போலீஸார், 3 மணி நேரத்திற்குள்ளாக மணிரத்னம் மற்றும் அவரது நண்பர் பார்த்தசாரதி (22) ஆகிய இருவரை கைது செய்த நிலையில் திலீப், அஜய் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

மதுரையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு;

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இந்து அமைப்புகள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள ராஜாஜி பூங்காவில் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்து மாணவர் சங்கம் மதுரை மாவட்டம் சார்பாக பூங்கா வாசலில் கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பூங்காவிற்கு நுழைந்து காதலர் தினத்திற்கு எதிர்த்து விழிப்புணர்வு நோட்டீசுகளை வழங்கினர்.

குறிப்பாக விடுதலைப் போராட்ட வீரர்கள் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் ஆகியோரின் மரண தண்டனையை பிரிட்டிஷ் காரர்கள் உறுதி செய்த நாள் இன்று பிப்ரவரி 14 ஆகும். இந்த வீர தியாகிகளின் தியாகத்தை நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்த வேண்டிய நாள் என்ற வாசகங்கள் பொருந்திய விழிப்புணர்வு நோட்டீஸ்களை பூங்கா வளாகத்திற்குள் வழங்கினர். வட மாநிலங்களை போல இந்து அமைப்பினர் சிலர் தமிழகத்தில் ஒவ்வொரு காதலர் தினத்துக்கும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி