ஆப்நகரம்

600 ரூபாய் கடனை திருப்பி கேட்டதால் கொலை!

ஆத்திரத்தில் எடுக்கும் முடிவு, அதுவும் போதையில் எடுக்கும் முடிவு எத்தனையோ பேரின் வாழ்க்கையைச் சிதைத்துவிடுகிறது.

Samayam Tamil 15 Jan 2020, 9:28 am
ஒரு கொலைக்கான காரணம் இவ்வளவு சாதாரணமாக இருக்குமா என்று கேட்கலாம், ஆம் 600 ரூபாய் கடனைத் திருப்பிக் கேட்டதால் ஒரு கொலை அரங்கேறியிருக்கிறது.
Samayam Tamil 600 ரூபாய் கடனை திருப்பி கேட்டதால் கொலை


வில்சன் கொலை: தேடப்பட்டுவந்த இருவர் கைது!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கெரடமுத்தூரை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் நந்தகுமார். இவர் தனது நண்பர்களுடன் கடந்த ஞாயிறு அன்று விஜய், சுதாகர் என்ற இரு நண்பர்களுடன் மலைமேடு என்ற பகுதிக்கு சென்றுள்ளனர். நண்பர்கள் இருவரும் மது அருந்தியுள்ளனர். நந்தகுமார் மது அருந்தவில்லை. நந்தகுமாரிடம் விஜய் ஏற்கெனவே 600 ரூபாய் கடனாக வாங்கியுள்ளதாக தெரிகிறது.

ரயிலில் பிச்சை எடுக்க வைக்க பெண் குழந்தை கடத்தல்: கைதானவர் அதிர்ச்சி வாக்குமூலம்!

அந்தப் பணத்தை திருப்பிக் கேட்ட நிலையில் இருவருக்குமிடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விஜய் போதையில் நந்தகுமாரை தள்ளிவிட்டதில் அவர் ஒரு பாறை மீது விழுந்து உயிரிழந்துள்ளார்.

டிக் டாக் காதல்: கர்ப்பமான பள்ளி மாணவி தற்கொலை... திருப்பூரில் பரபரப்பு...

இது தொடர்பாக நந்தகுமார் பெற்றோர் காமநாயக்கன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் விஜய் மற்றும் சுதாகர் இருவரையும் கைது செய்து காமநாயக்கன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போதுதான் தங்களுக்கு கொடுத்த 600 ரூபாய் கடனை திருப்பி கேட்டதால் அவரை கொலை செய்தது தெரிய வந்தது.

அடுத்த செய்தி