ஆப்நகரம்

கொடைக்கானல் அருவியில் விழுந்த இளைஞர் சடலம்... ஒரு வாரம் கழித்து மீட்பு

கொடைக்கானல் அருகே செல்ஃபி எடுக்க முயன்று அருவியில் தவறி விழுந்த இளைஞரின் உடல் ஒருவாரத்துக்கு பிறகு பாறைகளுக்கு நடுவில் சடலமாக மீட்கப்பட்டது.

Samayam Tamil 9 Aug 2022, 2:21 pm
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அருவிகளில் நீர் வரத்து வேகமாக உள்ளது. இந்த சூழலில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த அஜய் பாண்டிய‌ன் (28) என்ற இளைஞர் கடந்த 3ஆம் தேதி தனது நண்பர்களுடன் கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் உள்ள புல்லாவெளி அருவிக்கு சென்றுள்ளார்.
Samayam Tamil kodaikanal news


அப்போது, அருவியின் பாறையிடுக்குகளில் இறங்கிய அஜய் பாண்டிய‌ன் தன்னை போட்டோ எடுக்க நண்பர்களிடம் கூறியுள்ளார். அப்போது, மேல் நின்றபடி நண்பர்கள் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தபோது ஆபத்தான இடுக்கில் நின்றுகொண்டிருந்த அஜய் பாண்டிய‌ன் திடீரென கால் இடறி கீழ் விழுந்து மாயமானார். பதறிப்போன நண்பர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

கள்ளக்காதல்: பீரோக்குள் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி... 22 வயசு இளம்பெண்ணுடன் சிக்கிய கணவன்

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அருவியில் விழுந்த அஜய் பாண்டிய‌னை கடந்த 5 நாட்களாக தீவிரமாக தேடி வந்த நிலையில் அஜய் பாண்டியனின் உடல் மீனாட்சி ஊத்து என்கிற இடத்தில் பாறைகளுக்கு நடுவில் சடலமாக மீட்கப்பட்டது. அருவில் விழுந்த வாலிபரின் உடல் ஒரு வாரத்துக்கு பிறகு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜய் பாண்டியனின் உடல் அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

அடுத்த செய்தி