ஆப்நகரம்

திருவள்ளூரில் சிகரெட் வாங்கி தர மறுத்த இளைஞர் கத்தியால் குத்தி கொலை.!

திருவள்ளூர் அருகே சாலையில் நின்றுகொண்டிருந்த வாலிபரைச் சொல் பேச்சு கேட்கவில்லை எனக் கூறி கத்தியால் குத்தி கொலை செய்த குடி போதை ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 30 Sep 2019, 2:28 pm
சென்னையை அடுத்ததாகத் திருவள்ளூர் மாவட்டமே பெருநகரமாகக் கருதப்படுகிறது. சென்னைக்குக் குடியேற நினைக்கும் பலரும் இந்த பகுதியில் வீடு, மனை வாங்கி வருகின்றனர். வளர்ந்து வரும் மாவட்டங்களில் முக்கியமாக நிகழக்கூடிய திருவள்ளூரில் குற்றச் சம்பவங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
Samayam Tamil 3


திருவள்ளூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ஷியாம் என்கிற சாமுவேல். இவர் தனது சக நண்பர்களுடன் அங்குள்ள லால் பகதூர் சாஸ்திரி தெருவில் சென்று கொண்டிருந்தபோது அங்குக் குடிபோதையில் நின்று கொண்டிருந்த பொன்ராஜ் என்பவர் இவர்களை அழைத்திருக்கிறார்.

வாலிபர்கள் வந்ததும் அவர்களிடம் தனக்கு சிகரெட் வாங்கி வாருங்கள் எனப் போதையிலிருந்த பொன்ராஜ் கூறியிருக்கிறார். இதற்கு ஷியாம் மறுத்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற அவர்களை வழி மறித்து தகராறு செய்த பொன்ரா ஜ் தான் வைத்திருந்த கத்தியால் ஷியாமின் மார்பில் பலமாகக் குத்தி விட்டு காரில் தப்பித்துள்ளார்.

இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ஷியாம் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தப்பிச் சென்ற பொன்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி