ஆப்நகரம்

பலாப்பழ குடோனில் தீ விபத்து... 5 டன் பழங்கள் எரிந்து நாசம்!

பண்ருட்டி பலா பழ குடோனில் தீ பிடித்து எரிந்ததில் 5 டன் பலா பழங்கள் எரிந்து சேதமடைந்தது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 24 May 2022, 5:21 pm

ஹைலைட்ஸ்:

  • பண்ருட்டி பலா பழ குடோனில் தீ விபத்து
  • 5 டன் பலா பழங்கள் எரிந்து சேதம்
  • காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பலாப்பழ குடோனில் தீ விபத்து
கடலூர் மாவட்டம் பண்ருட்டி கும்பகோணம் சாலை பணிகன்குப்பத்தில் ஏராளமான பலாப்பழ மண்டிகள் உள்ளன. இங்கு பண்ருட்டி அடுத்த கொட்டிகோணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் பலாப்பழம் மண்டி நடத்தி வருகிறார். இவர் பண்ருட்டியில் இருந்து சென்னை உள்பட வெளியூர்களுக்கு பலாப்பழம் ஏற்றுமதி செய்வதற்கு சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தோப்புகளில் இருந்து பலாப்பழங்களை கொண்டு வந்து சென்னைக்கு லோடு ஏற்றிச் சென்றுள்ளார். மீதி உள்ள பலாப்பழம் குடோனில் வைக்கப்பட்டிருந்தது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் வழக்கம்போல இரவு பலா மண்டியை பூட்டி கொண்டு காவலாளி ரத்தினசாமி பாலா வியாபாரி முத்துக்கண்ணு ஆகியோர் இரவு தங்கி உள்ளனர். நல்லிரவில் பலா மண்டி குடோன் திடீர் என்று தீப்பிடித்து எரிந்துள்ளது. தீ எரிவதை பார்த்து குடோனில் தங்கியிருந்த இருவரும் வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். குடோன் முழுவதும் தீ பரவி மண்டியில் இருந்த சுமார் 5 டன் பலா பழம் மற்றும் இருசக்கர வாகனம் தீயில் பற்றி எரிந்தது.

கடலூா் புதிய பேருந்து நிலைய விவகாரம்: போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்!

உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது. மேலும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காடாம்புலியூர் போலீசார் தீ விபத்து ஏற்பட மின் கசிவு காரணமா இல்லை வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி