ஆப்நகரம்

ஆடு மேய்த்தவர்கள் ஷாக்; சோகத்தில் ஆழ்ந்த கிராம மக்கள்!

ஆடு மேய்ப்பவர்கள் கண்ட காட்சியானது கிராம மக்களை மீளா துயரத்தில் ஆழ்த்தியது.

Samayam Tamil 5 Dec 2021, 8:25 pm
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த டி.வி.புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகன் சந்தோஷ் (12 ). இவர் நண்பர்களுடன் வெள்ளாற்றில் குளிக்க சென்ற போது வேகமாக வந்த வெள்ளத்தில் சிக்கி வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார். உடனடியாக ஆற்றங்கரையில் ஆடு மாடுகள் மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
Samayam Tamil சிறுவன் மூழ்கி இறந்த ஆறு
சிறுவன் மூழ்கி இறந்த ஆறு


பின்னர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோது சிறுவன் ஏற்கனவே இறந்தது பரிசோதனையில் தெரிய வந்தது. இதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

வாலிபர் இதயத் துடிப்பை மீட்ட நர்ஸ்; மறுவாழ்வு தந்தவருக்கு பாராட்டுகள்!

இதனால் டி.வி.புத்தூர் கிராம பகுதியில் சோகம் நிலவுகிறது. விருத்தாசலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் நீர்நிலைகளில் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. மாவட்ட நிர்வாகம் கிராமப்பகுதியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி