ஆப்நகரம்

விருத்தாச்சலத்தில் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய கணவன், மனைவி.. கணவன் மீது ஏறி இறங்கிய ரோடு ரோலர் வாகனம்.. மனைவி கண்முன்னே உடல்நசுங்கி பலி!

விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த கணவன், மனைவி மீது ரோடு ரோலர் வாகனம் ஏறி இறங்கியதில் கணவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 5 Apr 2023, 7:27 pm
ரோடு ரோலர் வாகனம் ஏறி இறங்கியதால் கணவர்‌ உடல் நசங்கி உயிரிழப்பு:
Samayam Tamil கணவன் மீது ஏறி இறங்கிய ரோடு ரோலர் வாகனம்
விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த கணவன், மனைவி மீது ரோடு ரோலர் வாகனம் ஏறி இறங்கியதில் கணவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவிலுக்கு சென்று மொட்டை அடித்து விட்டு, இருசக்கர வாகனத்தின் மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மனைவியின் கண் எதிரே கணவன் மீது தார் ரோடு ரோலர் வாகனம் ஏறி இறங்கியதால், கணவர்‌ உடல் நசங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கோ. ஆதனூர் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி அமுதா ஆகிய இருவரும், இருசக்கர வாகனத்தின் மூலம் விருத்தாச்சலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் திருக்கோவிலுக்கு வேண்டுதல் நிறைவேற மொட்டை அடித்து வேண்டிக்கொள்ள சென்றுள்ளனர்.



இந்நிலையில் மொட்டை அடித்து விட்டு, இருசக்கர வாகனத்தின் மூலம், வீடு திரும்பி கொண்டிருந்த போது, மணலூர் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தின் மீது ஏறிக்கொண்டிருந்தனர். அதே சமயம் தார் சாலை பணிக்காக பயன்படுத்தப்படும் பழைய மாடல் வண்டியான ரோடு ரோலர், மேம்பாலத்தில் இருந்து, கீழே இறங்கிக் கொண்டிருந்தது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அப்போது ரோடு ரோலரில் பிரேக் பிடிக்காமல், மேம்பாலத்தில் தாறுமாறாக ஓடியபடியே, கட்டுப்பாட்டை இழந்து‌ கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதியதில், வாகனத்தை ஓட்டி வந்த, ராதாகிருஷ்ணன் ரோடு ரோலரின் இரும்பு சக்கரத்தில், மாட்டிக் கொண்டதால், அவரது உடல் முழுவதும், இரும்பு சக்கரம் ஏறி இறங்கியுள்ளது.

பின்னர் ரோடு ரோலர், மேம்பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி நின்றுள்ளது. இவ்விபத்தில் ராதாகிருஷ்ணன் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அந்தியூரில் கடமான் வேட்டை.. சுற்றி வளைத்த வனத்துறை.. துப்பாக்கியுடன் சிக்கிய கும்பல்..!

மேலும் அவரது மனைவி, பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு, பொதுமக்களின் உதவியுடன், விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாச்சலம் காவல்துறையினர், உயிரிழந்த ராதாகிருஷ்ணனின் உடலை, கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விருத்தாச்சலம் காவல்துறையினர் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திவிட்டு, தப்பியோடிய, ரோடு ரோலரின் ஓட்டுநரை‌ தீவிரமாக தேடி வருகின்றனர். கோவிலுக்கு சென்று வேண்டிக்கொண்டு, மொட்டை அடித்து விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்த போது, மனைவியின் கண்முன்னே, கணவன் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி