டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட் - கடலூர் கோர்ட் அதிரடி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் டிஎஸ்பி (Cuddalore Court Order Arrest Warrant to DSP) சரவணனை பிடிக்க கடலூர் கோர்ட் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும் வடலூர் இன்ஸ்பெக்டருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
Samayam Tamil 11 Aug 2022, 4:35 pm
ஹைலைட்ஸ்:
- கடலூரில் டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன் பிறப்பிப்பு
- சாட்சியம் அளிக்க ஆஜராகாமல் இருந்ததால் கடலூர் கோர்ட் அதிரடி
- இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கடலூர் மாவட்டம் வடலூரில் கடந்த 2016 ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சரவணன். இவர் தற்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் டிஎஸ்பியாக உள்ளார். இந்த நிலையில் டிஎஸ்பி சரவணன் கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு ஒன்றில் சாட்சியம் அளிக்க வராமல் இருந்துள்ளார். கோர்ட் மூலமாகவும் கடலூர் எஸ்பி மூலமாகவும் அழைப்பானை அனுப்பியும் அவர் வராததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அதேபோல வடலூரில் கடந்த 2017 ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஏழுமலை. இவர் தற்போது திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டராக உள்ளார்.
ஏழுமலையும் கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க ஆஜராகாமல் இருந்து வந்தார். அதனால் அவருக்கும் நேற்று பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார்.
ஒரே நீதிமன்றத்தில் காவல்துறை அதிகாரிகள் இருவருக்கு பிடிவாரண்ட் திரட்டிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த இரண்டு வழக்குகளும் வரும் 23ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் சிவகாமி தெரிவித்துள்ளார்,
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அதேபோல வடலூரில் கடந்த 2017 ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஏழுமலை. இவர் தற்போது திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டராக உள்ளார்.
ஏழுமலையும் கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க ஆஜராகாமல் இருந்து வந்தார். அதனால் அவருக்கும் நேற்று பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார்.
ஒரே நீதிமன்றத்தில் காவல்துறை அதிகாரிகள் இருவருக்கு பிடிவாரண்ட் திரட்டிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த இரண்டு வழக்குகளும் வரும் 23ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் சிவகாமி தெரிவித்துள்ளார்,