ஆப்நகரம்

வெள்ளாற்று வெள்ளத்தில் காணாமல் போன தரைப்பாலம்!

இந்த பாலத்தின் வழியே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கோட்டைக்காடு, முள்ளுக்குறிச்சி, முதுகுளம், நாச்சிகுளம் உள்ளிட்ட 30 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Nov 2018, 11:37 am

ஹைலைட்ஸ்:

வேறு வழி இல்லாமல் பெண்ணாடம் வழியாக செல்ல 27 கி.மீ. தொலைவுக்குச் சுற்றி செல்ல வேண்டியுள்ளது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil 154303713138633
கடலூர் மற்றும் அரியலூரை இணைக்கும் தலைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த சௌந்தர சோழபுரம் கிராமத்திலிருந்து அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்துக்குச் செல்ல தரைப்பாலம் இருந்தது. வெள்ளாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட இந்த பாலம் தொடர் மழை காரணமாக ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் வழியே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கோட்டைக்காடு, முள்ளுக்குறிச்சி, முதுகுளம், நாச்சிகுளம் உள்ளிட்ட 30 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வேறு வழி இல்லாமல் பெண்ணாடம் வழியாக செல்ல 27 கி.மீ. தொலைவுக்குச் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. சரக்குகளை ஏற்றிச்செல்பவர்கள் இதனால் பெரிதும் அவதிப்படுவதாகக் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்