ஆப்நகரம்

பண்ருட்டி: எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க... அதுவும் ஸ்கூல் மாணவிகளிடம்... இதுக்கு பேருதான் நூதன கொள்ளை!

பண்ருட்டியில் பள்ளி மாணவிகளிடன் நூதன முறையில் பண மோசடி நடந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதாவது, ஸ்காலர்ஷிப் பெற்று தருவதாக கூறி மர்மநபர் இந்த மோசடியை அரங்கேற்றி இருக்கிறார். பணத்தை கையில் வாங்காமல் மாணவிகளிடம் நூதன முறையி மோசடி செய்து கம்பி நீட்டிவர்கள் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். பள்ளி மாணவிகளிடம் மர்மநபர்கள் கைவரிசையை காட்டியது பண்ருட்டி சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Written byபிரபாகர் B | Samayam Tamil 16 May 2023, 12:11 pm

ஹைலைட்ஸ்:

  • பண்ருட்டியில் நூதன மோசடி
  • பள்ளி மாணவிகளிடம் கைவரிசை
  • பெற்றோர் காவல்நிலையத்தில் புகார்
  • காவல்துறை விசாரணை தீவிரம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil panrutti cheating
panrutti cheating
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள மாளிகைமேடு கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, அவர் உங்களது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வந்துள்ளதாகவும் அதனை பெற்று தருவதாகவும், அதனால் உங்களது வங்கி கணக்கில் ரூபாய் 3,500 வரை இருப்பு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மாணவிகளிடம் மோசடி

இதனை நம்பிய பள்ளி மாணவிகள் மூன்று பேர் சக மாணவிகளில் ஒருவரது செல்போனில் இருந்து ஜி பே மூலம் ஆன்லைனில் பணத்தை செலுத்தி உள்ளனர். இதேபோன்று தொடர்ந்து மூன்று முறை 10 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை மாணவிகள் செலுத்தி இருக்கிறார்கள். இதுதொடர்பாக், சம்பந்தப்பட்ட நபரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசியபோது அழைப்பை துண்டித்து விட்டார்.

காவல்நிலையத்தில் புகார்

இதேபோன்று மேலும் ஒரு மாணவியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி 8000 ரூபாய் பணத்தைப் பெற்று ஏமாற்றியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிளஸ் டூ மாணவி ஒருவர் இது குறித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை விசாரித்த போலீசார் இதுகுறித்து கடலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

ஆசையை காட்டி மோசடி

பணத்தை இழந்த மாணவிகள் அனைவரும் ஒரே பள்ளியில் படித்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது பன்னிரண்டாம் வகுப்பு முடித்து பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி செல்லும் நிலையில் மாணவ மாணவிகளை குறிவைத்து பண ஆசையை தூண்டி ஆன்லைன் மூலம் மோசடிகள் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் பண்ருட்டி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்காலர்ஷிப் பெற்று தருவதாக பள்ளி மாணவிகளிடம் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெற்றோர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எழுத்தாளர் பற்றி
பிரபாகர் B
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவன். ஊடகத்துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். எழுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எனது கருத்து. தற்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி