ஆப்நகரம்

இருளர்கள் எடுத்த பரபரப்பு முடிவு; அரண்டு போன பிடிஓ!

இருளர்கள் எடுத்த திடீர் முடிவை பார்த்து வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் அரண்டு போய் கிடக்கின்றனர்.

Samayam Tamil 29 Jan 2022, 4:07 pm
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம், விருத்தாசலம் ஒன்றியம் பரவலூர் கிராமத்தில் பழங்குடி இருளர் மக்களின் சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும் செப்பனிடவும் கோரி விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
Samayam Tamil பழங்குடிகள் போராட்டம்
பழங்குடிகள் போராட்டம்


இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு பழங்குடி இருளர் பேரவை மாநிலத் தலைவர் இருளப்பு செல்வகுமார் தலைமை தாங்கினார். பரவலூர் கிராம பழங்குடிகள் மாரியப்பன், சித்திராகொளஞ்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அசிங்கப்படுத்திய அமைச்சர்.. வெடிக்கும் விடுதலை சிறுத்தைகள்!

இந்த போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ், திராவிடமணி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் தென்றல், முருகன், பழனிச்சாமி, அய்யாதுரை மற்றும் பழங்குடி இருளர் பேரவை நிர்வாகிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பரவலூர் கிராம பழங்குடி மக்கள் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

ரேஷன் அதிகாரிகள் திடீர் உத்தரவு; கார்டுதாரர்கள் செம ஷாக்!

இதையறிந்து அங்கு வந்த விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ) மற்றும் காவல் துறையினர் ஒரு வாரத்திற்குள் கோரிக்கை நிறைவேற்றுவதாகவும் உடனடியாக சென்று சம்மந்தப்பட்ட இடத்தினை பார்வையிட்டு, நிதி ஒதுக்கீடு செய்து பாதையை உருவாக்கி தருவதாகவும் உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்தனர்.

அடுத்த செய்தி