வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, விழுப்புரம், நாகை, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் புனித மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்திற்கும் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னரே அறிவித்திருந்தது. அதற்கு ஏற்றார் போலவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக அனேக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு இன்று அதிகாலை புயலாக வலுப்பெற்றது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூசில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அந்த புயல் புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே நாளை இரவு கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று காலை முதலே கடலூர் மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
எனவே மீன்வளத் துறை சார்பில் கடலூர் மாவட்டம் மீனவர்கள் மற்றும் மீனவ கிராமங்களான நல்லவாடு, தாளங்குடா, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் மீனவர்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவர்களது படகு மற்றும் வளைகள் மேலான பகுதிக்கு கொண்டு செல்லவும் மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
கடலூரில் புயல் எச்சரிக்கை கொடி இரண்டாம் எண் தொடரும் நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து கடற்கரை மீனவ கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மீன்வளத்துறை மூலம் வெளியேற்றப்படுகின்றனர்.
மேலும் இந்த புயல் குறித்த எச்சரிக்கையை மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், மழை மற்றும் புயல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அவசரகால கட்டுப்பாட்டு அரை கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077 மற்றும் 04142-221383, 04142-233933, 04142-221113 ஆகியவைக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
கடலோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் பழுதடைந்த பலவீனமான வீடுகள், நீர் சூழக்கூடிய மற்றும் நீர் போகும் சாத்தியக்கூறு உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்டம் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மட்டும் நாளை புயல் மற்றும் கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் எப்போதும் போல் அலுவலகம் மற்றும் ஊழியர்கள் பணி நடைபெறும் என பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் மாண்டஸ் புயலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. மேற்கொண்டு பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படியும் அனாவசியமாக புயல் கரையை கடக்கும் வரை வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூசில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அந்த புயல் புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே நாளை இரவு கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று காலை முதலே கடலூர் மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
எனவே மீன்வளத் துறை சார்பில் கடலூர் மாவட்டம் மீனவர்கள் மற்றும் மீனவ கிராமங்களான நல்லவாடு, தாளங்குடா, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் மீனவர்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவர்களது படகு மற்றும் வளைகள் மேலான பகுதிக்கு கொண்டு செல்லவும் மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
கடலூரில் புயல் எச்சரிக்கை கொடி இரண்டாம் எண் தொடரும் நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து கடற்கரை மீனவ கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மீன்வளத்துறை மூலம் வெளியேற்றப்படுகின்றனர்.
மேலும் இந்த புயல் குறித்த எச்சரிக்கையை மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், மழை மற்றும் புயல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அவசரகால கட்டுப்பாட்டு அரை கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077 மற்றும் 04142-221383, 04142-233933, 04142-221113 ஆகியவைக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
கடலோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் பழுதடைந்த பலவீனமான வீடுகள், நீர் சூழக்கூடிய மற்றும் நீர் போகும் சாத்தியக்கூறு உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்டம் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மட்டும் நாளை புயல் மற்றும் கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் எப்போதும் போல் அலுவலகம் மற்றும் ஊழியர்கள் பணி நடைபெறும் என பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் மாண்டஸ் புயலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. மேற்கொண்டு பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படியும் அனாவசியமாக புயல் கரையை கடக்கும் வரை வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.