ஆப்நகரம்

என்எல்சியை வைத்து நாங்களும் அரசியல் செய்வோம் - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி!

என்எல்சியை வைத்து நாங்களும் அரசியல் செய்வோம். ஆனால் அதனால் மக்களுக்கு பயன் இருக்க வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 10 May 2023, 7:45 pm

ஹைலைட்ஸ்:

  • என்எல்சியை வைத்து அனைவரும் அரசியல் செய்வார்கள்
  • நாங்களும் செய்வோம். ஆனால் அதனால் மக்களுக்கு பயன் இருக்க வேண்டும்
  • வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
என்எல்சியை வைத்து நாங்களும் அரசியல் செய்வோம். ஆனால் அதனால் மக்களுக்கு பயன் இருக்க வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி:

என்எல்சியை வைத்து அனைவரும் அரசியல் செய்வார்கள். நாங்களும் செய்வோம். ஆனால் அதனால் மக்களுக்கு பயன் இருக்க வேண்டும் என்றும், என்எல்சியை மூட வேண்டும் என ஒரு கூட்டம் செயல்படும் நிலையில், அதனை நம்பி பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நம்பி உள்ளது என்பதனை சிந்திக்க வேண்டும் என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேள்வி:

பாமகவை சார்ந்தவர்கள்‌ மத்தியில் பதவியில் இருந்த போது என்எல்சியை மூடாமல் இப்போது ஏன் மூட வேண்டும் என்று குழப்பத்தை விளைவிக்கின்றனர் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.


கடலூர் எம்.புதூர் பகுதியில் என்எல்சி சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் 80 லட்ச ரூபாய் செலவில் 40 படுக்கை வசதி கொண்ட அரசு நெஞ்சக காசநோய் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதனை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

அமைச்சரவை மாற்றம்-செம அப்செட்டில் பூண்டி கலைவாணன்.. கலைந்தது கனவு!

பின்னர் நிகழ்வில் பேசிய அமைச்சர், என்எல்சி வைத்து எல்லோரும் அரசியல் செய்வார்கள். நாங்களும் செய்வோம், என்எல்சி மக்கள் நல பணிகளை செய்து கொடுக்கும். ஆனால் அதனை தேவையான நேரத்தில் செய்து கொடுக்க வேண்டும் என்றும் போராட்டம் என்பது எளிது. தூண்டிவிடுவது என்பது எளிது. அதனால் பாதிக்கப்படுவது மக்கள் தான் என தெரிவித்தார்.

என்எல்சி பொது நிவாரண நிதியாக 100 கோடி வழங்க வேண்டும்:

என்எல்சியை மூட ஒரு கூட்டம் செயல்படும் நிலையில், அதில் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நம்பி உள்ளதை மக்கள் சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பாமக சார்ந்தவர்கள் என்.டி.சண்முகம், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவியில் இருந்த போது என்எல்சியை மூடியிருக்கலாமே. இப்போது ஏன் குழப்பத்தை விளைவிக்க வேண்டும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பினார்.

தம்பி நீ எல்லாம் கலெக்டரா வரணும்னு பா.. இளைஞருக்கு ஆர்டிஓ அறிவுரை.. ஆனந்தக் கண்ணீர் விட்ட பெற்றோர்கள்!

தொடர்ந்து என்எல்சி சுற்றியுள்ள நெய்வேலி பகுதியில் என்எல்சி பொது நிவாரண நிதியாக 100 கோடி வழங்க வேண்டும் என உத்தரவிட்டு ஒப்பந்தம் போடப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் வழங்க தெரிவிக்கபட்டுள்ளது எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி