ஆப்நகரம்

அழகாய் இல்லாத கணவரை கொன்ற புதுமணப்பெண்

கடலூர் அருகே புதிதாக திருமணமான பெண், தனது கணவர் அழகாக இல்லை என்ற காரணத்தால் அவரது தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்த கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

PTI 11 Apr 2017, 5:43 pm
கடலூர்: கடலூர் அருகே புதிதாக திருமணமான பெண், தனது கணவர் அழகாக இல்லை என்ற காரணத்தால் அவரது தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்த கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil newly married woman murders husband for not being handsome
அழகாய் இல்லாத கணவரை கொன்ற புதுமணப்பெண்


கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக திருமணமான 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண், தனது கணவருடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில் ஆத்திரமடைந்து அவரது தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். தனது கணவர் அழகாக இல்லை என்றும், தனக்கு பொருத்தமானவர் இல்லை என்றும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கூறியதால் கணவர் மீது இளம்பெண் வெறுப்பை கொட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், கணவரை கொன்றுவிட்டு, யாரோ கொலை செய்துவிட்டார்கள் என கூறி ஒப்பாரி வைத்த இளம்பெண் மீது சந்தேகித்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தியபோது, கணவரை கொன்றதை அவரே ஒப்புக் கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இளம்பெண்ணை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி தற்போது நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.

A newly married woman allegedly murdered her husband by smashing his head with a grinding stone, upset that he was not handsome, police said today.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்