ஆப்நகரம்

தமிழகத்தைத் தமிழன்தான் ஆள வேண்டும்: பாரதிராஜா உறுதி

தமிழகத்தைத் தமிழன்தான் ஆள வேண்டும்: பாரதிராஜா உறுதி

Samayam Tamil 4 May 2018, 1:40 am
கடலூர்: தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
Samayam Tamil raja_647_071716040958


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. இந்த நிலையில் காவிரி பிரச்சனைக்காக டெல்டா பகுதி போராட்ட களமாக மாறியுள்ளது. தற்போது கடலூர் மஞ்சக்குப்பத்தில் காவிரிக்காக போராட்டம் செய்து வருகிறார்கள்.

கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடக்கும் போராட்டத்தில் இன்று இயக்குனர் பாரதிராஜா கலந்து கொண்டார். இந்த போராட்டத்தில் பேசிய அவர் ''தமிழகத்தில் கனிம வளங்கள் சூறையாடப்படுகின்றன. மணல் கொள்ளை தொடங்கி தண்ணீர் வரை கொள்ளையடிக்கப்படுகிறது. தமிழகம் பாலைவனமாக்கப்படுகிறது. காவிரியில் நாம் ஏமாற்றப்படுகிறோம்'' என்றார்.

''தமிழகத்துக்கு தமிழன் மட்டும் தலைவனாக முடியும். தமிழர்கள் கண்ணியமானவர்கள், அடக்கமானவர்கள், எவ்வளவு கோபமாக பேசினாலும் நாம் வன்முறையை கையால் கூடாது. நாம் வீரமாக இருந்தாலும் விவேகமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.தொழில் செய்யலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எங்கள் ஆனால் படுக்கையில் பங்கு கேட்காதே'' என்றும் குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி