ஆப்நகரம்

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து.. பாமக எடுத்த அந்த முடிவு!

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பாமக எடுத்த திடீர் முடிவு பெரும் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 31 Mar 2022, 8:45 pm
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக கருதி கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய அதிமுக அரசு வன்னியர் சமூக மக்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை அளித்தது. இதையடுத்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீடு வழங்கி அதிமுக ஆட்சியில்‌ சட்டமும் இயற்றப்பட்டது.
Samayam Tamil ராமதாஸ்
ராமதாஸ்


இந்த உத்தரவால் பாட்டாளி மக்கள் கட்சியும், பிற சில அமைப்புகளும் உற்சாகம் அடைந்தன. பின்னர் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, 10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு அரசாணை பிறப்பிப்பதில் தாமதம் செய்வதாக பாமக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

நடிகர் விஜய் எடுக்கும் முடிவு; இதுதான் நேரம் இனி அதிரடி!

இந்நிலையில் திமுக அரசு அதற்கான அரசாணை பிறப்பித்தது. இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான தமிழக அரசு வெளியிட்டது.


இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீட்டை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டது.

நகை கடனில் புதிய நிபந்தனை; அதிர்ச்சியில் பயனாளிகள்!

இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வன்னியருக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு செல்லாது என உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் வன்னியருக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது செல்லும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

போக்குவரத்து ஊழியர்கள் ஷாக்; கழுத்தை பிடிக்கும் அரசு!

இந்நிலையில் கடலூர் உழவர் சந்தையில் பாமகவினர் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட அனுமதி இல்லை என எச்சரித்ததால் ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்திவிட்டு கலந்துகொண்டனர்.

அடுத்த செய்தி