ஆப்நகரம்

உயிரை காவு வாங்கும் கிள்ளுக்கீரை கிளினிக்குகள்!

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே தனியார் கிளினிக்கிள் சிகிச்சை பெற்ற 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 9 May 2022, 11:40 am
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது 5 வயது மகள் ராட்சிதா கடந்த 4 நாட்களாக காய்ச்சல் காரணமாக சரியாக உணவு சாப்பிடவில்லை எனக் கூறப்படுகிறது.
Samayam Tamil social activist requested tn health department should audit private clinic centers
உயிரை காவு வாங்கும் கிள்ளுக்கீரை கிளினிக்குகள்!


இதனால், சிறுமி ராட்சிதாவை அவரது தந்தை கார்த்திக் வேப்பூரில் உள்ள தாரா மருந்தகம் மற்றும் கிளினிக்குக்கு அழைத்துச்சென்று டாக்டரிடம் காட்டியுள்ளார். அப்போது, குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார்.

பின்னர், குழந்தை ரட்சிதாவை அழைத்துக்கொண்டு கார்த்திக் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டில் உணவருந்திய பிறகு மருத்துவர் வழங்கிய மாத்திரைகளை குழந்தைக்கு கொடுத்துள்ளனர். சிறிதி நேரத்தில் வாந்தி எடுத்த ராட்சிதா அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, குழந்தையை மீண்டும் அதே கிளினிக்குக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் விரைவாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று அலட்சியமாக கூறியதாக தெரிகிறது.

பின்னர், வேறு வழியின்றி குழந்தையை வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு, குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர். சம்பவம் குறித்து அறிந்த வேப்பூர் காவல் நிலைய போலீசார், வேப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தை உடலை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், குழந்தை மரணத்திற்கு தனியார் கிளினிக் மருத்துவர் தான் காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அங்கு நேரில் சென்ற போலீசார், கிளினிக் அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ளதா? மருந்தகத்தில் எதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டது? அவர் மருத்துவர் படித்தவர் தானா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரிந்துரை இல்லாமல் மெடிக்கல்களில் மருந்து வாங்காதீங்க- மா.சு எச்சரிக்கை!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தில் மருத்துவர் பரிந்துரையின்றி மருந்தகத்தில் கருகலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் மறைவதற்குள் தற்போது கடலூரில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், ஆங்காங்கே கிளினிக் என்ற பெயரில் கிள்ளுக்கீரை போல் முளைத்திருக்கும் சிகிச்சை மையங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தணிக்கை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவர் பரிந்துரை சீட்டு இன்றி மருந்தகங்களில் மாத்திரை வழங்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி