ஆப்நகரம்

வாய்க்காலில் கண்ட காட்சி; பீதியில் உறைந்த மக்கள்!

வாய்க்கால் தண்ணீரில் கண்ட காட்சி பொதுமக்களையும், போலீசாரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Samayam Tamil 21 Nov 2021, 10:11 am
கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த பூதவராயன்பேட்டை பகுதியில் சின்ன வாய்க்காலில் தொப்புள் கொடியுடன் பிறந்த குழந்தை மிதந்து வந்தது. இதனை கண்ட ஊர் பொதுமக்கள் புவனகிரி காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
Samayam Tamil பொதுமக்கள்
பொதுமக்கள்



தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புவனகிரி காவல் துறையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் வாய்க்காலில் மிதந்து வந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஜெய் பீம்: சூர்யா மீது புதிய புகார்; தமிழ் சினிமா வட்டாரம்.. அதிர்ச்சி!

இந்த சம்பவம் தொடர்பாக பூதவராயன்பேட்டை கிராம நிர்வாக அதிகாரி சுகுமாறன் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சடலமாக மீட்கப்பட்ட குழந்தை யாருடையது? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி