ஆப்நகரம்

ஊரை விட்டு ஒதுக்கி வைத்து தீர்ப்பு; கலெக்டரிடம் கண்ணீர்விட்ட தம்பதி!

ஊரை விட்டு ஒதுக்கி வைத்து கிராமத்து நவீன நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியதாக மாவட்ட கலெக்டரிடம் கணவன், மனைவி கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 26 Oct 2021, 9:32 pm
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பஞ்சம்குப்பம் ரோடு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தேவி. தம்பதி இருவரும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றினை அளித்து உள்ளனர்.
Samayam Tamil புகார் அளித்த தம்பதி
புகார் அளித்த தம்பதி


அந்த மனுவில் தம்பதி கூறியிருப்பதாவது:

எங்கள் ஊரில் 16 வயது சிறுமிக்கு கடந்த 16.06. 2021 அன்று திருமணம் நடைபெற்றது. இதுதொடர்பாக காவல் நிலையத்திற்கு நாங்கள் புகார் கொடுத்ததாக ஊர் முக்கியஸ்தர்கள் தவறுதலாக புரிந்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து என்னை ஊரைவிட்டு ஒதுக்கி விட்டனர். நாங்கள் நத்தம் புறம்போக்கு பகுதியில் வீடு கட்டி 17 ஆண்டு காலமாக வசித்து வருகிறோம்.

இந்த நிலையில் எங்களை ஊரில் இருக்கக்கூடாது. கோவில் விசேஷங்களில் கலந்து கொள்ளக்கூடாது. ஊரில் நடக்கும் சுக, துக்க நிகழ்வுகளில் பங்கேற்க கூடாது என கூறி இழிவுபடுத்தி ஊரை விட்டு விலக்கி வைத்துள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு திடீர் உத்தரவு; கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தல்!

எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், ஊருக்குள் நிம்மதியாக வாழவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு எழுதப்பட்டுள்ள புகார் மனுவை தம்பதி இருவரும் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியமை சந்தித்து கொடுத்தனர்.

அடுத்த செய்தி