ஆப்நகரம்

சூடாகும் பாமக... அன்புமணியோட அரசியலே இதுதான்... உடைத்து பேசும் திருமா..!

என்எல்சி விவகாரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை விசிக தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார்.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 1 Apr 2023, 2:19 pm
தென்மாவட்டங்களில் பாஜகவை வீழ்த்தினால் அதன் பலம் குறைந்துவிடும் என்றும் என்எல்சி விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அரசியல் செய்வதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.
Samayam Tamil anbumani thiruma


கடலூர் என்எல்சி நிறுவனத்துக்கு மக்களின் நிலங்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட விவகாரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பல கட்ட ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார். நிலத்துக்கு பதிலாக ஏக்கருக்கு இழப்பீடு மற்றும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் வைத்து வருகிறார்.

மேலும், தொழிற்சாலைகளுக்கு நிலம் கொடுத்தவர்களை பங்குதாரர்களாக அறிவிக்கும் வழக்கம் உலகம் முழுவதும் உள்ள நிலையில், வேலை கூட வழங்க மாட்டோம் என்ற கொள்கையை என்எல்சி கடைபிடிப்பதாகவும் குற்றசாட்டு வைத்து வருகிறார்.

இந்த நிலையில், ''என்ன்எல்சி நிறுவனத்தின் கட்டாய நிலப்பறிப்பால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் தொடர்பாக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உண்மைக்கு புறம்பான விஷயங்களை கூறியதாகவும் தமிழக அரசு என்எல்சிக்கு செய்தி தொடர்பாளர் வேலையை பார்ப்பதாகவும் விமர்சித்தார்'' அன்புமணி ராமதாஸ். இந்நிலையில் அன்புமணியின் கருத்தை திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

கடலூருக்கு வருகை தந்த விசிக தலைவரும், எம்பி-யுமான திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி தந்தார். அப்போது அவர், தென்மாவட்டங்களில் பாஜகவை தோற்கடித்தாலே அதன் பலம் முழுக்க குறைந்து விடும். மக்களால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடக அரசை பாரதிய ஜனதா கட்சி தன் சூழ்ச்சி வலையால் தோற்கடித்து ஆட்சி மாற்றம் செய்தது.வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக தேர்தல் கருத்துக்கணிப்பில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி வரும் என்பது உறுதி என்றார்.

தொடர்ந்து பேசியவர், என்எல்சி பிரச்சனைகள் கூட்டணி கட்சிகளின் சார்பில் கடுமையான போராட்டத்திற்கு பிறகு மத்திய அரசு 25 லட்சம் ரூபாய் ஒரு ஏக்கருக்கு வழங்கி உள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வற்புறுத்தி வருகிறோம். இதற்கிடையே, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என்எல்சி பிரச்சனையில் மத்திய அரசிடம் ஒரு பிடிமண்ணையும் இழக்க மாட்டோம் என்று கூறுவது அரசியல் என்று திருமாவளவன் கூறினார். கடலூர் என்எல்சி விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் திமுக அரசை விமர்சித்து வரும் நிலையில் அதற்கு திருமாவளவன் எதிர்வினையாற்றி இருப்பது பாமகவை சூடு ஏற்றியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி