கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலில் தெற்கு கோபுரம் வாயில் பகுதி நந்தனார் நுழைந்த பகுதியாக கருதப்படுகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள சுவர் தற்போது தீண்டாமை சுவர் என பல்வேறு தரப்பு மக்களால் பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அந்த சுவற்றை அகற்றியே ஆக வேண்டும் என பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பல தரப்பு மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்த நிலையில் நேற்று இரவு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் சென்ற வாலிபர் ஒருவர் சுமார் எட்டு மணி அளவில் நந்தனார் முளைவு பகுதியில் உள்ள கதவின் பூட்டை உடைத்துள்ளார். அதனை அந்த கோயிலில் தீட்சிதர்கள் கண்டு அந்த விவகாரம் குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
தீட்சிதர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிதம்பரம் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த நபரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த வாலிபர் சிதம்பரம் அருகே உள்ள மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் அவர் பெயர் ஆனந்த் (30) என்பதும் தெரிய வந்தது.
அவர் நந்தனார் அரசு பள்ளியில் படித்ததாகவும் அவர் படித்தபோது பள்ளி ஆசிரியர் நந்தனார் நுழைந்த வாயில் தீண்டாமை சுவர் எனவும் கூறியுள்ளதாகவும் எனவே அதனை அகற்ற வேண்டும் என கூறியதால் அந்த இளைஞர் அவ்வாறு செய்துள்ளார்.
அதுவும் அந்த இளைஞர் சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரியர் கூறியதை மனதில் வைத்துக்கொண்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதே பகுதியில் சூடம் ஏற்றி வழிபட்டுள்ளார். அதனை அடுத்து நேற்று இரவு அந்தக் கதவின் பூட்டை சுத்தியல் மற்றும் உளியால் அடித்து உடைத்துள்ளார்.
தற்போது தீட்சிதர்கள் அந்த இளைஞர் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இளைஞரை சிதம்பரம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கோயில் பகுதியை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
13 ஆண்டுகளை கடந்து ஆசிரியர் தீண்டாமை சுவர் குறித்து கூறியதை மனதில் வயிற்றுக் கொண்டு இளைஞர் செய்த அந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் காட்டு தீ போல பரவி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இளைஞர் செய்த அந்த செயலால் அப்பகுதி தீட்சிதர்கள் அனைவரும் கடும் கோபத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்த நிலையில் நேற்று இரவு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் சென்ற வாலிபர் ஒருவர் சுமார் எட்டு மணி அளவில் நந்தனார் முளைவு பகுதியில் உள்ள கதவின் பூட்டை உடைத்துள்ளார். அதனை அந்த கோயிலில் தீட்சிதர்கள் கண்டு அந்த விவகாரம் குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
தீட்சிதர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிதம்பரம் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த நபரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த வாலிபர் சிதம்பரம் அருகே உள்ள மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் அவர் பெயர் ஆனந்த் (30) என்பதும் தெரிய வந்தது.
அவர் நந்தனார் அரசு பள்ளியில் படித்ததாகவும் அவர் படித்தபோது பள்ளி ஆசிரியர் நந்தனார் நுழைந்த வாயில் தீண்டாமை சுவர் எனவும் கூறியுள்ளதாகவும் எனவே அதனை அகற்ற வேண்டும் என கூறியதால் அந்த இளைஞர் அவ்வாறு செய்துள்ளார்.
அதுவும் அந்த இளைஞர் சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரியர் கூறியதை மனதில் வைத்துக்கொண்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதே பகுதியில் சூடம் ஏற்றி வழிபட்டுள்ளார். அதனை அடுத்து நேற்று இரவு அந்தக் கதவின் பூட்டை சுத்தியல் மற்றும் உளியால் அடித்து உடைத்துள்ளார்.
தற்போது தீட்சிதர்கள் அந்த இளைஞர் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இளைஞரை சிதம்பரம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கோயில் பகுதியை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
13 ஆண்டுகளை கடந்து ஆசிரியர் தீண்டாமை சுவர் குறித்து கூறியதை மனதில் வயிற்றுக் கொண்டு இளைஞர் செய்த அந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் காட்டு தீ போல பரவி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இளைஞர் செய்த அந்த செயலால் அப்பகுதி தீட்சிதர்கள் அனைவரும் கடும் கோபத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.