ஆப்நகரம்

தருமபுரியில் பள்ளி மாணவி கடத்தல்!

தருமபுரி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 18 Oct 2021, 10:33 pm

ஹைலைட்ஸ்:

  • தருமபுரியில் 10-ம் வகுப்பு சிறுமியை கடத்தி திருமணம்
  • 18 வயது இளைஞர் போக்சோவில் கைது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil dharmapuri child marriage
தருமபுரியில் அதிகரிக்கும் குழந்தை திருமணம்
தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டு காவல் நிலையத்திற்குட்பட்ட பட்டவர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் சிவா(18) அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இருவரும் கடந்த 6-ஆம் தேதி மாயமாகினர்.
சிறுமியின் தந்தை தனது மகளை காணவில்லை என கொடுத்த புகாரின் பேரில் பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.சிவா மனைவியை அழைத்துக்கொண்டு திருப்பூரில் இருக்கும் தனது உறவினர் வீட்டில் தங்கி இருப்பது தெரியவந்தது.

பின்னர் திருப்பூர் விரைந்த போலீசார் இருவரையும் பிடித்து தருமபுரி அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் இளைஞரை போக்சோ தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
சிலுவை இருந்த இடத்தில் திரிசூலத்தை நட்ட இளைஞர்கள்... உச்சகட்ட பரபரப்பு!

தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளை காதல் வலையில் சிக்க வைத்து இளைஞர்கள் திருமணம் செய்வதும், பின்னர் போக்சோ தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் இது போன்ற பிரச்சனைகளை கையில் எடுத்து உரிய தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி