ஆப்நகரம்

பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் தான் நிறைவேற்றம்!

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

Samayam Tamil 12 Jun 2021, 5:36 pm
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பி.டி.ஒ., அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்து செயலாளர்கள் ஆகியோருக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம் உதவி திட்ட அலுவலர் மணிமேகலை தலைமையில் நடந்தது.
Samayam Tamil பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம் நடக்கிறது
பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம் நடக்கிறது


இந்த கூட்டத்தில், கொரோனா நோய் அதிகம் பாதிக்கப்பட்ட கிராமங்களை கண்டறிந்து மருத்துவ முகாம் நடத்துதல், துண்டு பிரசுரம் மூலம் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கிராம பகுதிகளை தூய்மையாக வைத்திருத்தல், அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்வதன் அவசியத்தை எடுத்துரைத்தல் ஆகியவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அதிமுகவில் புயலை கிளப்பும் சசிகலா; தொண்டர்கள் உற்சாகத்தால் பரபரப்பு!

இந்த கூட்டத்தில் யூனியன் சேர்மேன், பாஞ்சாலை கோபால், பி.டி.ஒ.,க்கள், ரவி, ரவிச்சந்திரன், டெப்டி பி.டி.ஒ., சர்வோத்தமன், வட்டார மருத்துவ அலுவலர்கள் சிவகுரு, தமிழ்செல்வன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி