ஆப்நகரம்

சொந்த வீட்டிற்கு தீ வைத்த விவசாயி; இந்த கொடுமைய யார்கிட்ட சொல்ல?

தருமபுரியில் விவசாயி தனது சொந்த வீட்டை தீ வைத்து கொளுத்தினார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Samayam Tamil 2 Aug 2021, 1:48 pm
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த எர்ரணஹள்ளி பூம்மரத்து பள்ளம் பகுதியை சேர்ந்த முருகன் (50). விவசாயி. இவரது மனைவி பச்சையம்மாள் (45). இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
Samayam Tamil வீடு தீயில் கருகி உள்ளது
வீடு தீயில் கருகி உள்ளது


தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களாக முருகன் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முருகனின் மனைவி, மகன்கள் வெளியே சென்றனர்.

அப்போது வீட்டில் இருந்த இரண்டு சமையல் சிலிண்டரை சுற்றிலும் கால்நடைகளுக்கு வைத்திருந்த வைக்கோல் போட்டு முருகன் தீ வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.

வீட்டில் இருந்து கரும்புகை வருவதை பார்த்து அருகே இருந்த பொதுமக்கள் பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அனைத்தனர்.

ஆய்வில் இறங்கிய பாமக எம்எல்ஏ; சாலை விபத்துகளை தடுக்க முடிவு!

அதற்குள் வீட்டில் இருந்த டி.வி, பிரிட்ஜ், சமையல் பாத்திரம் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. விரைந்து வந்து தீயை அணைத்ததால் சிலிண்டர்கள் வெடிக்காமல் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி