ஆப்நகரம்

தருமபுரி மாவட்ட மக்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!

அரூர் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் நலனுக்காக அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரம் இருநாட்கள் சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 20 Oct 2021, 9:01 pm
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பழங்குடியினர் நலஅலுவலக திட்ட அலுவலர் புன்கிழமை மற்றும் வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பழங்குடியின மக்களின் நலன் கருதி முகாம் அலுவலகமாக செயல்படவுள்ளதாக ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Dharmapuri news

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரூர் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வாரத்தில் இரு நாட்கள் முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அடுத்த செய்தி