ஆப்நகரம்

எலக்‌ஷன் ரிசல்ட் எப்படி வரும்?; போலீசார் அவசர ஆலோசனை!

தேர்தல் முடிவு நாளை வெளியாக உள்ள நிலையில் காவல் துறையினர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 1 May 2021, 4:43 pm
தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளை கொண்ட மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் தருமபுரி செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு, 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil காவல் துறையினர் ஆலோசனை கூட்டம்
காவல் துறையினர் ஆலோசனை கூட்டம்


இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு தருமபுரி மாவட்ட காவல் துறை சார்பில் ஆலோசனை கூட்டம் தருமபுரி கேந்திர வித்யாலயா பள்ளியில் நேற்று நடந்தது.

ஏரிக்குள் அண்ணன், தம்பி வெட்டி படுகொலை; நள்ளிரவில் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பயங்கரம்!

இந்த கூட்டத்தில் எவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்? வெற்றி கொண்டாட்டங்களை எப்படி தடுப்பது? என்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது. இதில், காவல் துறையினர் பலர் கலந்துகொண்டனர்.

அடுத்த செய்தி