ஆப்நகரம்

ஓபிஎஸ்சை கடுப்பேத்தும் அதிமுக; இபிஎஸ் கை ஓங்குவதால் அதிருப்தி!

தர்மபுரி மாவட்டம், அரூர் அதிமுக சார்பில் கச்சேரிமேட்டில் ‘இ.பி.எஸ். பேரவை’ என்கிற பெயரில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம் படமும் உள்ளதால் அவர் கடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 11 May 2021, 1:48 pm
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் சலசலப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்விட்டது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து சசிகலாவை தூக்கி வைத்து கொண்டாடினர்.
Samayam Tamil இபிஎஸ் பேரவை சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்
இபிஎஸ் பேரவை சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்


பின்னர் அவரை அதிமுகவின் பொதுச்செயலாளராக அறிவித்து இருவரும் உள்ளம் மகிழ்ந்தனர். முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து பறித்தார் சசிகலா. இதனால் அவர் மெரினா கடற்கரையில் ஜெயலலிதா சமாதியில் தர்ம யுத்தம் நடத்தினார்.

இதற்கிடையே, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக முடி சூட்டிவிட்டு சசிகலா சிறை சென்றார். இதன் பிறகு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டு ஓபிஎஸ் சமாதானம் செய்யப்பட்டார். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரும் பெயரளவுக்கு இணைந்தாலும் மனதளவில் ஒருவருக்கொருவர் விரோதிகள் போல் நடந்து கொள்வதாக ஊடகங்கள் தாறுமாறாக எழுதி தள்ளின.

ஆனால் எதற்கும் பதில் அளிக்கவோ அல்லது விளக்கம் அளிக்கவோ இருவருமே விரும்பவில்லை. ஒருகட்டத்தில் மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து கூட்டணியிலும் அங்கம் வகித்தனர். இதை அதிமுகவினரே விரும்பவில்லை.

சிஎம்சி ஆஸ்பத்திரிக்கு அரசு அதிரடி உத்தரவு; கொரோனா சிகிச்சை தற்காலிகமாக நிறுத்தம்!

இதனால் தமிழக மக்களின் ஏகோபித்த கோபத்துக்கு இருவரும் ஆளானார்கள். அதன் விளைவாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. தற்போது திமுகவுக்கு அடுத்தபடியாக சட்டமன்றத்தில் அதிமுக பெரிய கட்சியாக உள்ளது. இதனால் எதிர்க்கட்சி தலைவர் பதவி அதிமுகவுக்கு கிடைத்துள்ளது.

ஆனால் இந்த பதவிக்கு நீயா? நானா? என இபிஎஸ்-ஓபிஎஸ் ஆகியோரிடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. இதில் ஓபிஎஸ் கருத்துக்கு செவி கொடுக்காமல் அதிமுகவினர் தன்னிச்சையாக எடப்பாடி பழனிச்சாமியை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுத்ததாக சட்டமன்றத்தில் கடிதம் கொடுத்தனர்.

முதல்வர் ரங்கசாமி நிலவரம்; தமிழக முதல்வர் தகவல்!

இதன் வாயிலாக அதிமுகவில் இபிஎஸ் கை ஓங்கியதாகவே பார்க்கப்படுகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூர் கச்சேரிமேட்டில் அதிமுக சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

அந்த பேனரில் புரட்சி தமிழர், குடிமராமத்து நாயகன், இடைப்பாடி பழனிசாமி, இணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதல்வர் மே 12ம் தேதி பிறந்த நாள் விழா கொண்டாடுகிறார். இந்த நாளில் அவரை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம். இப்படிக்கு இ.பி.எஸ். பேரவை என இருந்தது.

பாலுக்கு வழியின்றி தவிக்கும் மக்கள்; காற்றில் பறக்கும் முதல்வர் உத்தரவு!

மேலும் இதில் முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் அன்பழகன், ஆகியோரது படங்களும் உள்ளது. இந்த பேனரால் அதிமுகவினரிடைய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஏற்கனவே அதிருப்தியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவினரின் இந்த பேனர் கடுப்பேத்தும் வகையிலேயே உள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

அடுத்த செய்தி