ஆப்நகரம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்: குழந்தை திருமணங்களை தடுக்க தீர்மானம்!

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற மாதர் சங்க மாநாட்டில் குழந்தை திருமணங்களை தடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 9 Aug 2022, 6:41 pm
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 3- வது மாநாடு நடைபெற்றது. இதில் சத்யா தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் பூபதி மாநாட்டைத் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் கிரைஸாமேரி சிறப்புரையாற்றினார். வட்டார செயலாளர் ராஜாமணி அறிக்கை சமர்ப்பித்தார். நிர்வாகிகள் காவேரியம்மாள் , பவித்ரா, சத்யா, உமாராணி, தெய்வானை, அஞ்சலி ரகுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Samayam Tamil அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 3- வது மாநாடு
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 3- வது மாநாடு


ஆளுநர், ரஜினிகாந்த் சந்திப்பு: என்ன அரசியல் பேசினார்கள்? - கடம்பூர் ராஜூ கேள்வி!

மாநாட்டில் பாப்பாரப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சிறப்புப் பிரிவுகளுடன் கூடிய வட்டார மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், பாப்பாரப்பட்டி பகுதியில் குழந்தைத் திருமணங்கள், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாப்பாரப்பட்டி 8- வது வார்டு பகுதியில் மோட்டார் பைக்கில் வந்து பெண்களிடம் ஈவ் டீஸிங்கில் ஈடுபடும் சமூக விரோதிகளின் செயல் குறித்த புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்றவை விவாதிக்கப்பட்டன.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் நூறு நாள் வேலை வழங்க வேண்டும், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் தினசரி குடிநீர் வழங்கிட வேண்டும் குடிநீர்க் கட்டணம் மற்றும் குடிநீர் இணைப்பு டெபாசிட் தொகை ஆகியவற்றை குறைத்திட வேண்டும், மலையூர் கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கிட வேண்டும், தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு இலவச தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி