ஆப்நகரம்

ஆடு மேய்த்த இளம்பெண்; காட்டில் கிழவன் செய்த காரியம்!

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மனநலம் பாதித்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 17 May 2021, 10:15 am
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பூனையன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (60). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மனோகரன் வழக்கம்போல் ஆடுகளை ஓட்டிக்கொண்டு அருகே உள்ள வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்றுள்ளார்.
Samayam Tamil மனோகரன்
பலாத்காரம் செய்த நபர்


அதே வனப்பகுதிக்கு 29 வயதான மனநலம் பாதித்த இளம்பெண் தனது தந்தையுடன் ஆடு மேய்க்க வந்துள்ளார். சிறிது நேரத்தில் இளம்பெண்ணின் ஆடுகள் காட்டுக்குள் வழிதறி சென்றன. இதனால் ஆடுகளை ஓட்டி வருவதற்காக அப்பெண்ணின் தந்தை வனப்பகுதிக்குள் சென்றார்.

இந்த தருணத்துக்காக எதிர்பார்த்து காத்திருந்த மனோகரன் அங்கு தனியாக இருந்த இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இதுகுறித்து அப்பெண் நடந்தை தனது தந்தையிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண்ணின் தந்தை பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். அதன்பெயரில் மனோகரனை போலீசார் பிடித்து வந்து விசாரணை செய்தனர்.

போலீசை தெறிக்க விட்ட ஸ்டாலின்; வீடு தேடி வந்த இன்ஸ்பெக்டர்!

போலீஸ் விசாரணையில் ஆடு மேய்க்க வந்த அந்த இளம்பெண்ணை மனோகரன் பாலியல் பலாத்காரம் செய்தது உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து நேற்று மனோகரனை போலீசார் கைது செய்தனர்.

அடுத்த செய்தி