ஆப்நகரம்

ஆயுத பூஜை: திடீர் கடைகளின் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்!

தருமபுரி மாவட்டத்தில் ஆயுத பூஜை விழாவுக்காக வாழைமரம், பூசணிக்காய் உள்ளிட்டவைகளை சாலையோரம் விற்பனை செய்தவர்கள் அப்படியே விட்டுச்சென்றுள்ளனர்.

Samayam Tamil 16 Oct 2021, 7:12 pm
இந்தியா மட்டுமின்றி, இந்தியர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நவராத்திரி, துர்காஷ்டமி, தசரா, ஆயுத பூஜை, விஜயதசமி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவில் முக்கிய பங்கு வகிக்கும் கொலு பொம்மைகள், வாழைமரம், திருஷ்டி பூசணிக்காய், பூக்கள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்ய சாலையோரங்களில் திடீர் கடைகள் வைக்கப்பட்டன.
Samayam Tamil Dharmapuri
தருமபுரி


கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நடைபாதை வியாபாரிகள் கடும் இன்னல்களை அனுபவித்த நிலையில், இந்த ஆண்டு சற்று விடிவு காலம் பிறந்து விற்பனை சுமாராக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வியாபாரிகள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

ஆனால், சாலையோரங்களில் முளைத்த திடீர் கடைகள் தங்களது கடைகளில் விற்பனையாகாத வாழைமரம், பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரங்களில் விட்டிச்சென்ற பொருட்களால் நகரின் பல பகுதிகள் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.
நகைக்காக மூன்று குழந்தைக்கு தாயை கொன்ற இளைஞர்... கள்ளக் காதலால் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

தருமபுரியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் பூக்கள், வாழைமரம், பூசணிக்காய் உள்ளிட்டவைகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளதால் நகராட்சி நிர்வாகம் விரைவாக குப்பைகளை அப்புறப்படுத்த நவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி