ஆப்நகரம்

மாணவர்கள் வரிசையில் ஆசிரியர்கள் மோதல்-அரசு பள்ளி அவலம்!

தருமபுரி மாவட்டத்தில் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரி ஒருவர் ஆசிரியர்களை ஒருமையில் பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 1 May 2022, 5:54 am
தருமபுரி மாவட்டத்தில் 8 வட்டார வளர்ச்சி கல்வி அலுவலகம் உள்ளது. இதில் 18 வட்டார கல்வி அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள குறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது தான் வட்டார கல்வி அலுவலர்கள் பணி.
Samayam Tamil govt school teachers


தருமபுரி ஒன்றியத்தில் உள்ள 300 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிகளை கண்காணிக்க ஜீவா என்கிற வட்டார கல்வி அலுவலர் உள்ளார். இவர் பள்ளிகளுக்கு ஆய்வுக்கு செல்லும் போது, தலைமை ஆசிரியைகளையும், ஆசிரியர்களையும் ஒருமையில் பேசுவதோடு, ஒழுங்கீனமாக நடந்துக்கொள்வதாக கூறப்படுகிறது.

இதனால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சிலர் அதிகாரி ஜீவா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால், அந்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும் அடுக்கப்படவில்லை.
சாம்சங் கேலக்ஸி M32 வெல்ல அட்டகாசமான வாய்ப்பு. இந்த படிவத்தை பூர்த்தி செய்து பல கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லுங்கள்

இந்நிலையில், நேற்று ஆசிரியர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் வட்டார கல்வி அலுவரை நேரில் சந்தித்து, ஏன் ஆசிரியர்களை தரக்குறைவாக பேசுகின்றனர் என கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது வட்டார கல்வி அலுவலர் ஜீவாவிற்கும் ஆசிரியர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சுமார் ஒருமணிநேரம் இந்த வாகுவாதம் நீடித்துள்ளது.

பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த ஆசிரியர் விஜயராகவன் பேசியதாவது:-
"வட்டார கல்வி அலுவலர் ஜீவா, பள்ளிகளுக்கு செல்லும் போது ஆசிரியைகளை ஒருமையில் பேசுவது மற்றும் தகாத வார்த்தைகளால் திட்டுவதோடு லஞ்சம் பெறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஏன் இப்படி பேசுகிறீர்கள் என கேள்வி எழுப்பியபோது, என் தாய் எனக்கு கழுதை பால் ஊற்றி வளர்த்தால் நான் சத்தமாக பேசுவேன் என ஏளனமாக பதில் அளிக்கிறார். அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவோம்" இவ்வாறு கூறினார்.
மு.க.ஸ்டாலின் தன்மானத்தை சோதிக்கும் பிரச்சனை... என்ன செய்யப்போகிறது அரசு?

கடந்த சில நாட்களாக அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இடையே மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் தற்போது அரசு பள்ளி ஆசிரியர்கள் வாக்குவாதம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி