ஆப்நகரம்

சிகிச்சைக்கு தவிக்கும் கொரோனா நோயாளிகள்; அதுவும் மாவட்ட தலைமை மருத்துவமனையிலயா?

தருமபுரி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் நீண்ட நேரமாக சிகிச்சைக்காக காத்துக்கிடக்கும் அவலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் மனிதநேயத்தோடு செயல்பட வேண்டும் என்பதே அனைத்து பொது மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

Samayam Tamil 9 May 2021, 4:39 pm
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து இந்த தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் எங்கு பார்த்தாலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
Samayam Tamil தர்மபுரி அரசு மருத்துவமனை
தர்மபுரி அரசு மருத்துவமனை


குறிப்பாக கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கை வசதிகள் மருத்துவ கல்லூரி நிர்வாகத்தால் ஒதுக்கப்படாததால் தரையிலேயே படுத்தும், மருத்துவமனை வராண்டாவில் நின்றுக்கொண்டும் ஏராளமான நோயாளிகள் நீண்ட நேரமாக சிகிச்சைக்காக காத்துக்கிடக்கும் அவலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் கெஞ்சுவதும், படுக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டுவதும் தொடர் கதையாகி வருகிறது.

புதுச்சேரியில் ரூ. 6 ஆயிரம் நிவாரணத்துடன் முழு ஊரடங்கு; பிரதமருக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி கோரிக்கை!

தங்களது வேண்டுகோளை மருத்துவமனை நிர்வாகம் காது கொடுத்து கேட்காமல் அலட்சிய போக்கையே கடைப்பிப்பதாகவும், ஆரம்ப கட்ட நோயாளிகளை உடனடியாக மருத்துவர்கள் மனிதநேயத்துடன் சிகிச்சை அளித்தால் கொரோனா நோயாளிகளை காப்பாற்றலாம் என்றும், வயதானவர்கள் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலையில் இளம் வயதினரும் தங்களது உயிரை காப்பாற்ற மருத்துவர்களை நாடி கெஞ்சுவதும் மிகவும் மனதை நெருடும் காட்சியாக உள்ளது.

தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் தங்களது உயிரை காத்துக்கொள்ள மருத்துவர்களை நாடி பலவகையில் கேட்டாலும் அதற்கான தீர்வு எட்டபடாத நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் உயிரிழப்பு தருமபுரியில் அதிகரித்து கொண்டே உள்ளது.

பஸ் மோதி போலீஸ்காரர் பலி; மற்றொரு காவலர் கதி?

அதனால் பாதிக்கபட்ட கொரோனா நோயாளிகளின் குடும்பத்தார் செய்வதறியாது பிரம்மை பிடித்தது போல் மருத்துவமனை வளாகத்தில் உலவிக் கொண்டு இருக்கின்றனர்.

எனவே தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் மனிதநேயத்தோடு செயல்பட வேண்டும் என்பதே அனைத்து பொது மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

அடுத்த செய்தி