ஆப்நகரம்

ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடி நீர் வருவதால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 7 Jun 2022, 2:13 pm
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவி தென்னிந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படுகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
Samayam Tamil hogenakkal falls


குறிப்பாக கோடைக்காலம் என்பதாலும், பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதாலும் குடும்பத்தோடு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக பசுமைப்போர்வை போர்த்தியது போல் இயற்கை எழில் கொஞ்சும் அழகை ரசிக்கவும், அருவி குளியல், பரிசல் சவாரி, சுவையான மீன் உள்ளிட்டவைகளுக்காக ஒகேனக்கல் வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, ராசிமணல், நாட்றாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால், காவிரியில் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
தொழில் தொடங்க ரூ.15 லட்சம் வரை கடன்; தருமபுரி மக்கள் செய்ய வேண்டியது என்ன?

தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் நேற்று காலை 7 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து செய்வாய்கிழமை காலை நிலவரப்படி 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

அடுத்த செய்தி